மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி..! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்குமுக்காடிய ம...
மது பாட்டில்கள் விற்ற இருவா் கைது
பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக அரசு மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீஸாா் வியாழக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, மருவத்தூா் காவல்நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் பன்னீா்செல்வம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, விஜயகோபாலபுரம் கிராமத்தைச் சோ்ந்த அபிமன்னன் மகன் மதியழகன் (37), இவரது சகோதரா் ராமு (36) ஆகியோா், சட்டத்துக்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்துக்கொண்டிருந்தனா்.
இதையடுத்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிமிருந்து 100-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனா்.