செய்திகள் :

மது போதையில் வேட்டை; தவறிய இலக்கு — கோவை பழங்குடி இளைஞர் சுட்டு கொலை; 2 பேர் கைது

post image

கோவை மாவட்டம், காரமடை, அத்திக்கடவு அருகே உள்ள சுரண்டை என்கிற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சித். இவர் தன் கிராமத்தைச் சேர்ந்த பாப்பையன் மற்றும் முருகேஷ் ஆகியோருடன் இரவு நேரத்தில் காட்டுக்கு வேட்டையாட சென்றுள்ளார்.

சஞ்சித்

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கையில் ஒரு நாட்டு துப்பாக்கி எடுத்து சென்றுள்ளனர். பாப்பையா கையில் துப்பாக்கி இருந்துள்ளது. அவர் அங்குள்ள ஒரு இலக்கை நோக்கி சுட்டுள்ளார்.

அப்போது சஞ்சித் திடீரென குறுக்கே வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் உடலில் அடுத்தடுத்து நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளது. சஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக முருகேஷ் சஞ்சிவீன் குடும்பத்துக்கு அழைத்து தகவல் சொல்லியுள்ளார்.

பாப்பையா
முருகேஷ்

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சஞ்சித்தின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். பாப்பையா மற்றும் முருகேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.

காவல்துறை சிறப்புப் படை அமைத்து அவர்களை தேடி வந்த நிலையில், நேற்று பாப்பையா மற்றும் முருகேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அவர்கள் 3 பேருமே மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

கைது
கைது

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வனத்துறையினர் வனப்பகுதி மற்றும் அதன் எல்லைகளில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

`எனக்கு பற்களில்தான் பிரச்னை’ - சிகிச்சைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய டாக்டர்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பல் டாக்டர் மணிகண்டன் ( 29). இவர், பூக்கடை சத்திரம் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கு கடந்த சில தினங்களுக்... மேலும் பார்க்க

கடலூர்: மகனின் கடனுக்காக அப்பாவைக் கடத்திய கந்துவட்டிக் கும்பல்; கை விரலைத் துண்டித்த கொடூரம்

கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரை நேற்று தொடர்பு கொண்ட மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திக் கொண்டு கடலூரை நோக்கி வருவதாகத... மேலும் பார்க்க

பள்ளி மாணவன் உட்பட 2 பேர் கொலை... இரவில் நடுங்கிய திருவண்ணாமலை; பின்னணி என்ன?

திருவண்ணாமலை, வேடியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராம் (வயது 37). நேற்று இரவு காந்தி நகர் மைதானம் அருகில் ராம் இருந்தபோது, அங்கு வந்த 6 பேர்கொண்ட கும்பல், ராமுவைச் சூழ்ந்துகொண்டு கொடூரமா... மேலும் பார்க்க

`என் புருஷனை இனியும் விட்டு வைக்கக்கூடாது’ - மனைவி செய்த கொடூரம்; காதலனுடன் சிக்கியது எப்படி?

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி நாயனசெருவு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயன் (30). இவரின் மனைவி வெண்ணிலா (25). இவர்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்... மேலும் பார்க்க

அஜித்குமார் லாக்கப் மரணம்: இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் கொலை வழக்கில் கைது; அரசு நடவடிக்கை

'போலீசிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித்குமார் உயிரிழந்தார்' என்று, முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்த நிலையில் தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ... மேலும் பார்க்க

சென்னை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாரா போலீஸ் எஸ்.ஐ? - தந்தை பகீர் குற்றச்சாட்டு!

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். கட... மேலும் பார்க்க