செய்திகள் :

கடலூர்: மகனின் கடனுக்காக அப்பாவைக் கடத்திய கந்துவட்டிக் கும்பல்; கை விரலைத் துண்டித்த கொடூரம்

post image

கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரை நேற்று தொடர்பு கொண்ட மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திக் கொண்டு கடலூரை நோக்கி வருவதாகத் தெரிவித்தார்.

அதையடுத்து எஸ்.பி ஜெயக்குமார் கடலூர் முதுநகர் காவல் நிலைய போலீஸாரை, உடனடியாக வாகன சோதனையில் களமிறக்கினார்.

குடிகாடு பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலின் கூறிய அடையாளத்துடன் வந்த காரை மடக்கினர். அதில் 5 பேர் இருந்த நிலையில், கடத்தப்பட்ட முதியவர் இல்லை.

கைது செய்யப்பட கந்துவட்டி கும்பல்
கைது செய்யப்பட கந்துவட்டி கும்பல்

அதையடுத்து அந்த 5 பேரையும் விசாரித்தபோது, `எங்களிடம் வாங்கிய கடனைக் கொடுக்காததால் நடராஜன் என்பவரைக் கடத்தினோம். அவரை அடித்து, கை விரலைத் துண்டித்து குடிகாடு பகுதியில் இறக்கிவிட்டுவிட்டோம்’ என்று கூறியிருக்கின்றனர்.

அதையடுத்து முதியவர் நடராஜனை மீட்ட போலீஸார், உடனே அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதேபோல கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட கந்துவட்டிக் கும்பலை, மயிலாடுதுறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் கடலூர் போலீஸார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூர் போலீஸார், ``கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 71 வயது நடராஜன், தற்போது மயிலாடுதுறை திருவிழந்தூர் மேல ஆராயாத் தெருவில் வசித்து வருகிறார்.

இவரின் மகனான மணிகண்டன் சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரிடம், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறார். அதில் 10 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்ட நிலையில், மீதித் தொகை ரூ.5 லட்சத்தைத் தருவதற்கு மேலும் தவணை கேட்டிருக்கிறார். அதை ஏற்காத பழனிசாமி, ரூ.5 லட்சத்தையும் தர வேண்டும் என்று கறார் காட்டியிருக்கிறார்.

கைது
கைது

மணிகண்டனால் உடனடியாக அந்தப் பணத்தைத் திருப்பி செலுத்த முடியவில்லை. அதில் கடுப்பான பழனிசாமி உள்ளிட்ட 5 பேர், முதியவர் நடராஜனை நேற்று காரில் கடத்தியிருக்கின்றனர். அந்தக் கடத்தல் செய்தி மணிகண்டனுக்குத் தெரிய வர, உடனே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.

அதனடிப்படையில் பழனிசாமி உள்ளிட்ட அடையாளம் தெரியாத 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸார், எங்கள் எஸ்.பி-க்குத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில்தான் சக்திவேல், பாண்டியன், பன்னீர்செல்வம், மரிய செல்வராஜ், தேவநாதன் உள்ளிட்டவர்களைக் கைது செய்தோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" - ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோ... மேலும் பார்க்க

`குண்டு வச்சிருக்கோம்..’ - தென்காசி முகவரியில் இருந்து வேலூர் ஆட்சியருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இருக்கிறது. அருகிலேயே எஸ்.பி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில், `பெறுநர் - ஆட்சியர்’ எனக் குறிப்பிட்டு, `விடுநர் - ... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி-யை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? - உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதில் மர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் மாணவி நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் - மத்திய பிரதேச கொடூரம்

மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள நர்சிங்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - உயிரைப் பறித்த ஒரு சவரன் நகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி தி... மேலும் பார்க்க

`எனக்கு பற்களில்தான் பிரச்னை’ - சிகிச்சைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய டாக்டர்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பல் டாக்டர் மணிகண்டன் ( 29). இவர், பூக்கடை சத்திரம் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கு கடந்த சில தினங்களுக்... மேலும் பார்க்க