செய்திகள் :

பள்ளி மாணவன் உட்பட 2 பேர் கொலை... இரவில் நடுங்கிய திருவண்ணாமலை; பின்னணி என்ன?

post image

திருவண்ணாமலை, வேடியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராம் (வயது 37). நேற்று இரவு காந்தி நகர் மைதானம் அருகில் ராம் இருந்தபோது, அங்கு வந்த 6 பேர்கொண்ட கும்பல், ராமுவைச் சூழ்ந்துகொண்டு கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த ராம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய கும்பலும் அங்கிருந்து ஓடிவிட்டது.

கொலை
கொலை

இது குறித்துத் தகவலறிந்து சென்ற திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸார், ஆட்டோ ஓட்டுநர் ராமுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரையும் விரைந்து பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக, ராம் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வந்திருக்கின்றன.

இதேபோல், திருவண்ணாமலை தாமரை நகர்ப் பகுதியிலும் பதினோராம் வகுப்புப் பயின்று வந்த கோகுல் (எ) சுனில் என்ற 16 வயது பள்ளி மாணவன் நேற்று இரவு குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கோட்டை முத்து என்பவரை நேற்று இரவே திருவண்ணாமலை நகரக் காவல் நிலையப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், கமுதியைச் சேர்ந்த கோட்டை முத்துவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் இளம்பெண்ணை மிரட்டி கோட்டை முத்து பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

Death
Death

இந்த விவகாரத்தில், இளம்பெண்ணைத் தேடிக்கொண்டு நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார் கோட்டை முத்து.

அப்போது, இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பதினோராம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் சென்று கோட்டை முத்துவிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், இந்த மோதலில் கோட்டை முத்து மறைத்து எடுத்துவந்த கத்தியை எடுத்துக் குத்தியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆனாலும், இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`குண்டு வச்சிருக்கோம்..’ - தென்காசி முகவரியில் இருந்து வேலூர் ஆட்சியருக்கு வந்த மிரட்டல் கடிதம்!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரியில் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையோரம் இருக்கிறது. அருகிலேயே எஸ்.பி அலுவலகமும் உள்ளது. இந்த நிலையில், `பெறுநர் - ஆட்சியர்’ எனக் குறிப்பிட்டு, `விடுநர் - ... மேலும் பார்க்க

சிவகங்கை எஸ்.பி-யை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை? - உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் என்ற இளைஞரை திருட்டுப் புகாரில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படை போலீசார் கடுமையாகத் தாக்கியதில் மர... மேலும் பார்க்க

மருத்துவமனையில் மாணவி நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் - மத்திய பிரதேச கொடூரம்

மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அங்குள்ள நர்சிங்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாணவி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: திருமணமான 4-வது நாளில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் - உயிரைப் பறித்த ஒரு சவரன் நகை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்தவர் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் கடந்த 27-ம் தேதி தி... மேலும் பார்க்க

`எனக்கு பற்களில்தான் பிரச்னை’ - சிகிச்சைக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய டாக்டர்

காஞ்சிபுரத்தை அடுத்துள்ள திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பல் டாக்டர் மணிகண்டன் ( 29). இவர், பூக்கடை சத்திரம் பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கு கடந்த சில தினங்களுக்... மேலும் பார்க்க

கடலூர்: மகனின் கடனுக்காக அப்பாவைக் கடத்திய கந்துவட்டிக் கும்பல்; கை விரலைத் துண்டித்த கொடூரம்

கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரை நேற்று தொடர்பு கொண்ட மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திக் கொண்டு கடலூரை நோக்கி வருவதாகத... மேலும் பார்க்க