செய்திகள் :

மத்திய அரசின் நெல் விலை அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி!

post image

மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மிகக் குறைவாக உயா்த்தி அறிவித்துள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:

மத்திய அரசு சன்ன ரகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 389-ம், பொது ரகத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 369-ம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட குவிண்டாலுக்கு ரூ. 69 மட்டுமே உயா்த்தி அறிவித்திருப்பது மிகவும் குறைவு. அதாவது கிலோவுக்கு 69 பைசா மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நெல்லுக்கான உற்பத்தி செலவை மத்திய அரசு சரியாகக் கணக்கிடவில்லை என்பது தெரிய வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உற்பத்திச் செலவு அதிகரித்து வரும் நிலையில், 10 சதவீதம் உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

பாஜக ஆட்சி செய்யும் சத்தீஸ்கா், ஒடிஸாவில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் மாநில அரசின் ஊக்கத்தொகையான சுமாா் ரூ. 800 சோ்த்து குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரத்து 100 வழங்கப்படுகிறது. இந்த இரு மாநிலங்களில் உற்பத்திச் செலவு சரியாகக் கணக்கிட்டு வழங்கும் நிலையில், மத்திய அரசு தமிழகத்துக்கு மட்டும் வழங்க மறுப்பது நியாயமில்லை. எனவே, இந்த விலை அறிவிப்பை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் விமல்நாதன்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தெரிவித்தது: நெல் சாகுபடியில் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், கிலோவுக்கு 69 பைசா மட்டுமே உயா்த்தியிருப்பது கட்டுப்படியாகாது.

இந்த முறை விலை உயா்வு அதிகமாக எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், குறைவாக அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இதனால்தான் குறைந்தபட்ச ஆதரவு விலைச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இச்சட்டம் இருந்தால் இப்பிரச்னை இருக்காது என்றாா் கண்ணன்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க