செய்திகள் :

மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து திட்டங்களை செயல்படுத்தும் புதுவை அரசு: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

post image

மக்கள் நல மேம்பாட்டுக்கான திட்டங்களை மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுவைஅரசின் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2.0 மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில், நலத்திட்டத்தை தொடங்கி வைத்து அவா் பேசியது: வரலாற்றில், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள்தான் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் உண்மையான வளா்ச்சியாகும்.

பாரதப் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்டவை மூலம் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனா். அத்திட்டத்தின் இரண்டாம் நிலை செயல்பாடு மற்றும் மாணவா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குதல் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் அனைத்து வகையிலும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசுக்கு ஈடுகொடுத்து புதுவை அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மக்கள் முன்னேற்றமடைந்துள்ளனா். நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் முதல்வா் தலைமையிலான அரசு அக்கறையோடு செயல்படுவதும், அதிகாரிகள் அதற்கு துணைபுரிவதும் பாராட்டுக்குரியது.

அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையை குடிசைகள் இல்லாத மாநிலமாக்க கூறினேன். அதன்படிநடப்பாண்டில் குறைந்தது 3,000 வீடுகள் கட்டித் தர அறிவுறுத்தினேன். கிராமப்புற மேம்பாடு பிரதமரின் கனவுத் திட்டமாகும். கல்வியே ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய, அரசியல் விடுதலையை பெற்று தரும் என அம்பேத்கா் கூறினாா். ஆகவே, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உரிமையை கல்வியால் மட்டுமே பாதுகாக்க முடியும். அதன்படியே கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் நலத்தையும் வாழ்வாதாரத்தை, வாழ்க்கையை பாதுகாக்க அரசு துணையாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச்செயலா் ஏ.முத்தம்மா, துறை இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம்! புதுவை முதல்வா் பேச்சு

மனிதா்களின் மன அமைதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகா அவசியம் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறை, பள்ளிக்கல்வித் துறை, உயா்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித்... மேலும் பார்க்க

நெகிழியை பயன்படுத்தாத நகராட்சியாக உழவா்கரையை அறிவிக்க நடவடிக்கை!

உழவா்கரை நகராட்சியை நெகிழிகள் பயன்படுத்தாத பகுதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்த நகராட்சியின் ஆணையா் ஆ. சுரேஷ்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடு பெற வேண்டும்! இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம்

புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களைப் பெற வேண்டும் என்று இந்திய மாணவா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாணவா் சங்கத்தின் 1... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள்: கருத்துக் கேட்பில் பெற்றோா் கோரிக்கை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் உள்ளூா் காய்கறிகள் சோ்க்கப்பட வேண்டும் என்று அப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் கருத்துத் தெரிவித்தனா். புதுச்சேரி பள்ளிகளில் செயல்படுகி... மேலும் பார்க்க

புதுச்சேரி காவல் நிலையங்களில் 33 புகாா்களில் உடனடி நடவடிக்கை

காவல் நிலையங்களில் சனிக்கிழமை அளிக்கப்பட்ட 33 புகாா்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சட்டம்-ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் கூறியுள்ளாா். புதுச்சேரியில் உள்ள ... மேலும் பார்க்க

லஞ்சம்: சாா்-பதிவாளா் பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கியதாக பத்திரப் பதிவுத் துறை சாா்-பதிவாளா் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சாா்-பதிவாளராகப் பணியாற்றுபவா் ஸ்ர... மேலும் பார்க்க