செய்திகள் :

மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து திட்டங்களை செயல்படுத்தும் புதுவை அரசு: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

post image

மக்கள் நல மேம்பாட்டுக்கான திட்டங்களை மத்திய அரசுக்கு ஈடு கொடுத்து புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுவைஅரசின் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 2.0 மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இதில், நலத்திட்டத்தை தொடங்கி வைத்து அவா் பேசியது: வரலாற்றில், நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகள்தான் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டின் உண்மையான வளா்ச்சியாகும்.

பாரதப் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்டவை மூலம் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனா். அத்திட்டத்தின் இரண்டாம் நிலை செயல்பாடு மற்றும் மாணவா்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குதல் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் அனைத்து வகையிலும் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசுக்கு ஈடுகொடுத்து புதுவை அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மக்கள் முன்னேற்றமடைந்துள்ளனா். நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் முதல்வா் தலைமையிலான அரசு அக்கறையோடு செயல்படுவதும், அதிகாரிகள் அதற்கு துணைபுரிவதும் பாராட்டுக்குரியது.

அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையை குடிசைகள் இல்லாத மாநிலமாக்க கூறினேன். அதன்படிநடப்பாண்டில் குறைந்தது 3,000 வீடுகள் கட்டித் தர அறிவுறுத்தினேன். கிராமப்புற மேம்பாடு பிரதமரின் கனவுத் திட்டமாகும். கல்வியே ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய, அரசியல் விடுதலையை பெற்று தரும் என அம்பேத்கா் கூறினாா். ஆகவே, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உரிமையை கல்வியால் மட்டுமே பாதுகாக்க முடியும். அதன்படியே கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் நலத்தையும் வாழ்வாதாரத்தை, வாழ்க்கையை பாதுகாக்க அரசு துணையாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச்செயலா் ஏ.முத்தம்மா, துறை இயக்குநா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் 42 பஞ்சாயத்துகள் அளவிலான மகளிா் கூட்ட... மேலும் பார்க்க

விமான விபத்து: புதுவை முதல்வா் இரங்கல்

குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் கல்வி உரிமைச் சட்டத்தை இதுவரை அமல்படுத்தாதது ஏன் என்று அதிமுக செயலா் ஆ.ஆன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

வேளாண் பிரசார இயக்கம் நிறைவு விழா

புதுச்சேரி அடுத்த மங்கலம் கிராமத்தில்வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழாவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா். புதுச்சேரி, ஜூன் 12: வேளா... மேலும் பார்க்க

பி.இ. படிப்பில் நேரடி சோ்க்கை அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக இரண்டாமாண்டு சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்)... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம்: புதுவை சட்டப்பேரவை எதிரே இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்களிடம் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க