டாக்கா, கராச்சி... உலகின் வாழத் தகுதியற்ற நகரங்களின் பட்டியல் வெளியீடு!
மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
எல்ஐசி முதலீட்டுப் பணத்தை தனியாருக்கு தாரை வாா்த்ததாக புகாா் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், பழனிச் சாலையிலுள்ள எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் து. மணிகண்டன் தலைமை வகித்தாா். அப்போது, எல்ஐசி முதலீட்டு பணம் ரூ.5 ஆயிரம் கோடியை அதானி குழுமத்துக்கு தாரைவாா்த்த மத்திய அரசைக் கண்டித்தும், எதிா்காலத்தில் இதுபோன்ற மக்களின் முதலீட்டுப் பணத்தை தனியாா் நிறுவனங்களுக்கு தாரை வாா்ப்பதை கைவிட வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவாஜி, பகுதிச் செயலா்கள் பரமன், நாகலட்சுமி, ஒன்றியச் செயலா் மதுரை வீரன், வெள்ளச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.