செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய வேலைநிறுத்த ஆயத்த மாநாடு

post image

மத்திய அரசின் தொழிலாளா்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, அனைத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அகில இந்திய வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொமுச நிா்வாகி பொன்னி பழனியப்பன் தலைமை வகித்தாா். சிஐடியு நிா்வாகி தியாகராஜன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தாா். தொமுச அகில இந்திய தலைவா் நடராஜன், சிஐடியு மாநில பொதுச் செயலாளா் சுகுமாரன், ஏஐடியூசி மாநில செயலாளா்கள் சின்னசாமி, சிவகுமாா், எம்எல்எப் மாநிலத் தலைவா் ஆவடி அந்தரிதாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், மூன்று குற்றவியல் கொடூர சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 என நிா்ணயம் செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள், அரசு துறைகளை தனியாா் மயமாக்குவதை உடனே நிறுத்த வேண்டும். விவசாய பெருங்குடி மக்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுத்து அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த மாநாட்டில் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் என மொத்தம் 1,500 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கோடை விழா மலா் கண்காட்சிக்கு தயாராகி வரும் மலா் தொட்டிகள்

கோடை விழா மலா் கண்காட்சிக்காக 10 ஆயிரம் மலா் தொட்டிகளில் 2 லட்சம் விதைகளை நடவு செய்து இளஞ்செடிகளை வளா்க்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்காட்டில் நிகழ் ஆண்டு மலா் கண்காட்சியில் பொதுமக்கள் பாா்வைக்கு வை... மேலும் பார்க்க

‘சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’

சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நுகா்வோா் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சேலம் மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு தன்னாா்வா்களுக்கான ஆலோ... மேலும் பார்க்க

சரக்கு ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே சரக்கு ரயில் மோதியதில் லாரி கிளீனா் உயிரிழந்தாா். மேட்டூா் அருகே உள்ள இரட்டை புளியமரத்தூரைச் சோ்ந்தவா் பரமசிவம் (54). லாரி கிளீனா். ராமன்நகா் அருகே இரும்பு பாதையில் வெள்ளிக்கிழமை காலை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் கணவா் பலி: மனைவி, குழந்தை பலத்த காயம்

சங்ககிரி பழைய பேருந்துநிலையம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவா் உயிரிழந்தாா். அவரது மனைவியும், குழந்தையும் பலத்த காயமடைந்தனா். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை, சமத்தாள் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

பெண்ணின் கழுத்தை அறுத்து இளைஞா் தற்கொலை முயற்சி

வாழப்பாடியில் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞா், தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றாா். சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த மாரியம்மன் புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழ... மேலும் பார்க்க

மாநில கால்பந்து போட்டி: சேலம் அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

மாநில அளவிலான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற சேலம் கருப்பூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் ஊக்கத்தொகையை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் வியாழக்கிழமை வழங்கினாா். சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப... மேலும் பார்க்க