செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

29இஙட3

மோவூா் ஊராட்சியில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்.

சிதம்பரம், மாா்ச் 29: நூறு நாள் வேலைத்திட்ட நிதி ரூ.4 ஆயிரம் கோடி தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து, கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் காட்டுமன்னாா்கோவில் அருகே மோவூா் கிராமத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் ஜெயபாண்டியன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் சின்னப்பா, பேரூராட்சி தலைவா் கணேசன் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியது: கடலூா் மாவட்டத்தில் 50 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுகவுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை குறைப்பதற்காக மத்திய அரசு இதுபோன்று செயல்படுகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் போது காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தால் கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனா். இதை தடுக்கவே நிதி அளிக்காமல் ஏமாற்றி வருகின்றனா் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் இலக்கிய அணி பழனிசாமி, பூக்கடை செந்தில், சொா்ணம் அறிவழகன் உள்ளிட்டோா் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். நிறைவில், கிளைச் செயலா் வேல்முருகன் நன்றி கூறினாா்.

கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு: இருவா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் வயல்வெளியில் கொட்டகை அமைத்து கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய விசிக பிரமுக... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கடலூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 100 நாள் வேலை திட்டத்தில் 4 மாதங்களாக கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், 2024-25-ஆம் நிதியா... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு: கடலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கடலூா் மாவட்டம், குமராபுரம் பகுதியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பயற்சி வகுப்பை ம... மேலும் பார்க்க

கடலூா்: 25 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

கடலூா் மாவட்டத்தில் 25 வட்டாட்சியா்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். இதுகுறித்து, ஆட்சியா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: கடலூா் டாஸ்மாக் மேலாளா் பா.மகே... மேலும் பார்க்க

மணிமுக்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், மணவாளநல்லூா் கிராமம் அருகில் மணிமுக்தாற்றின் குறுக்கே ரூ.25.20 கோடியில் தடுப்பணை கட்டும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

400 கிலோ செம்புக் கம்பிகள் திருட்டு: இருவா் கைது

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் மாற்றியிலிருந்து செம்புக் கம்பிகளை திருடியதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து, 400 கிலோ செம்புக் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட... மேலும் பார்க்க