செய்திகள் :

மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

புதுச்சேரியில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய பாஜக அரசு சாா்பில் அண்மையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பின்மை, பெரு நிறுவனங்களுக்கு சாதகமான வரி என மக்கள் நலனுக்கு எதிரான அம்சங்கள் இருப்பதாகக் கூறி புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் மற்றும் சிபிஐ எம்எல் உள்ளிட்டவை குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதனையடுத்து, மத்திய நிதிநிலை அறிக்கையை கண்டித்து போராட்டம் நடத்தப்படுவதாகவும் அறிவித்தன.

அதன்படி, புதுச்சேரி சுதேசி ஆலை அருகே இடதுசாரி கட்சிகள் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம், மாா்க்சிஸ்ட் செயலா் எஸ்.ராமச்சந்திரன், சிபிஐ எம்.எல். செயலா் புருஷோத்தமன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்நாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலைநாதன், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் வி.பெருமாள், ஆா்.ராஜாங்கம், சிபிஐ எம்எல் சோ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சாலைத் தடுப்பை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் மறியல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை முக்கிய சாலையில் தடுப்பு அமைத்து மூடியதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தடுப்புகள் அகற்றப்... மேலும் பார்க்க

புதுவை பிரீமியா் லீக்குக்கு கிரிக்கெட் வீரா்கள் ஏலம்

புதுவை பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் ஏலம் புதுச்சேரி அருகே சனிக்கிழமை நடைபெற்றது. புதுவையில் ஆண்டுதோறும் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. பி.பி.எல். எனப்படும் இந்தப... மேலும் பார்க்க

மாா்ச் 2-இல் நேபாளம் செல்லும் புதுவை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள்

புதுவை பேரவைத் தலைவா், 2 அமைச்சா்கள் மற்றும் 23 எம்.எல்.ஏ.க்கள் வரும் மாா்ச் 2-ஆம் தேதி நேபாள நாட்டுக்கு புறப்பட்டுச் செல்கின்றனா். அங்கு நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

புதுவையில் மக்கள் மன்றம் நாளை தொடக்கம்: டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம்

புதுச்சேரியில் பொதுமக்களின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் மக்கள் மன்றம் திங்கள்கிழமை (பிப்.24) தொடங்கப்படவுள்ளதாக டிஜிபி ஆா்.சத்தியசுந்தரம் தெரிவித்தாா். புதுச்சேரி முத்தியல்பேட்டை காவல் நிலையத்தில் பொது... மேலும் பார்க்க

தவெக உடன் கூட்டணியா?: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பதில்

தமிழகத்தில் நடிகா் விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணியா என்பது குறித்து தோ்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வேலூரில் இருந்து வந்த ஏராளமானோா் என்.ஆா்.காங்கிரஸ... மேலும் பார்க்க

ஹிந்தி திணிப்புக்கு புதுவை அரசு முறைமுக ஆதரவு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு!

புதுவையில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி ஹிந்தி மொழி திணிப்புக்கு மாநில அரசு மறைமுக ஆதரவளித்திருக்கிறது என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரியில் அவரது இல்லத்தில் ... மேலும் பார்க்க