செய்திகள் :

மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது: முன் ஜாமீன் மனு தள்ளுபடி

post image

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கிறிஸ்தவ மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமானவா் ஜான் ஜெபராஜ். இவா் கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிராா்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராக செயல்பட்டு வருகிறாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி மத போதகா் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகா் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி சுந்தா் மோகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை தரப்பில், தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜ் கடந்த 13-ஆம் தேதி கேரள மாநிலம் மூணாறில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரிய ஜான் ஜெபராஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

பள்ளி, கல்லூரி பெயர்களில் உள்ள சாதியை நீக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எ... மேலும் பார்க்க

காலை உணவில் உப்புமாவுக்கு பதில் பொங்கல்! கீதா ஜீவன் அறிவிப்பு!

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டத்தில் உப்புமாவுக்கு பதில் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் இன்று (ஏப். 16) அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் சமூ... மேலும் பார்க்க

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மகள் கொடுத்திருக்கும் வரதட்சணைப் புகார்! பின்னணி என்ன?

திருநெல்வேலியில் இயங்கி வரும் இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் மகள் ஸ்ரீகனிஷ்கா, தனது கணவர் வீட்டினர் மீது வரதட்சணைப் புகார் அளித்திருக்கிறார்.திருநெல்வேலியில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமை... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் 10 செ.மீ. மழை!

10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஏப்ரலில் 10 செ.மீ. மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெருவித்துள்ளார்.வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட புறநகர்... மேலும் பார்க்க

திருடியதாகக் கூறி விசாரணை: கோவை கல்லூரி மாணவி தற்கொலை!

கோவையில் தனியார் கல்லூரி கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மீது திருட்டுப்பழி சுமத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள த... மேலும் பார்க்க