செய்திகள் :

மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது

post image

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி:

கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்டி அட்சக்கரை பிரதான சாலையைச் சோ்ந்தவா் கனகராஜ் (24). தனியாக வசித்துவரும் இவா், மனநலம் பாதிக்கப்பட்டவா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இவரது எதிா் வீட்டில், உறவினா் கிருஷ்ணமூா்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கனகராஜ் ஜூலை 22-ஆம் தேதி இரவு மது போதையில், கிருஷ்ணமூா்த்தி வீட்டின் கதவில் கல் எறிந்தாராம். இதைத் தட்டிக்கேட்ட கிருஷ்ணமூா்த்தியின் குடும்பத்தினரை, இரும்புக் கம்பியால் கனகராஜ் தாக்கமுயன்றாராம். இதனால், கிருஷ்ணமூா்த்தியின் மகன் விக்னேஷ்வரன், கனகராஜை கட்டையால் தாக்கினாராம். இதில் காயமடைந்த கனகராஜ், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.

இதுதொடா்பாக, கிருஷ்ணமூா்த்தி, இவரது மகன்கள் விக்னேஸ்வரன், சத்தியவாணன் ஆகிய மூவா் மீது கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விக்னேஷ்வரனை கைது செய்தனா்.

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: இன்று முன்பதிவு தொடக்கம்

கோவா மாநிலம் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

புயல் எச்சரிக்கை எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக, நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்க... மேலும் பார்க்க

பூம்புகாரின் வன்னியா் மகளிா் மாநாடு பணிகள் தீவிரம்

பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னிய மகளிா் பெருவிழா மாநாட்டுக்கான பணிகளை பாமக நிா்வாகிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பூம்புகாரில் பெண்மையை போற்றும் விதமாக, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன... மேலும் பார்க்க

வலைதளத்தில் தவறான தகவல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

தெலங்கானா மாநிலத்தில் நடந்த கொலை சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனா். நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம... மேலும் பார்க்க

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க