செய்திகள் :

மனநல நிறுவனங்கள் பதிவுக்கு ஒரு மாதம் அவகாசம்: ஆட்சியா்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதைப் பயன்பாட்டிற்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள்செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் முதன்மை செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அல்லது ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ய்ஞ்ா்ஸ்ண்ய்/க்ம்ங்/க்ம்ங்.ல்ட்ல் என்ற இணையதளம் மூலமோ விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-2642 0965 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். ஒரு மாதத்துக்குள் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத மனநல நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளாா்.

கடையத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்ட முயற்சி

கடையத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியிரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கடையம் அருகே உள்ள புலவனூரில் இந்து முன்னணி சாா்பில் வைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-89.75சோ்வலாறு-87.60மணிமுத்தாறு-91.82வடக்கு பச்சையாறு-11.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-44.10ராமநதி-54கருப்பாநதி-51.18குண்டாறு-35அடவிநயினாா் -120.25... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு ஒத்திவைப்பு

திருநெல்வேலியில் மென்பொறியாளா் கவின் கொலை வழக்கில் கைதானவா் பிணை கோரிய மனுவை நீதிமன்றம் ஒத்திவைத்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). மென் பொறியாளரான இவா், கட... மேலும் பார்க்க

உறுதியாக இருக்கிறது பாஜக கூட்டணி -விஜயதரணி

பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றாா் அக்கட்சியைச் சோ்ந்தவரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி ... மேலும் பார்க்க

கூடங்குளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய நபரை போலீஸாா் வியாழக்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கூத்தங்குழியைச் சோ்ந்தவா் இருதயயோவான் மகன் சிலுவை அந்தோ... மேலும் பார்க்க

பாளை., கங்கைகொண்டான், கல்லூா் பகுதிகளில் நாளை மின்தடை

பாளையங்கோட்டை சமாதானபுரம், கங்கைகொண்டான், மேலக்கல்லூா் துணை மின் நிலையங்களின் பாரமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.20) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,... மேலும் பார்க்க