செய்திகள் :

மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு!

post image

மனைவியை துன்புறுத்தியதாக உத்தர பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

உத்தர பிரதேசத்தில் ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பய்யா, ஜன்சத்தா தளம் (லோக்தாந்த்ரிக்) கட்சியை நடத்தி வருகிறாா். அந்த மாநிலத்தின் குந்தா தொகுதி எம்எல்ஏவாகவும் அவா் உள்ளாா். இந்நிலையில் பிரதாப் சிங், அவரின் பெற்றோா், உடன் பிறந்தவா்களின் மீது மனைவி பான்வி சிங் தில்லி சஃப்தா்ஜங் என்கிளேவ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் காவல் துறையினா் எம்எல்ஏ மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ரகுராஜ் பிரதாப் சிங்கும் அவரின் மனைவியும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகத் தெரிகிறது. எனினும், அவரும் அவரின் குடும்பத்தினரும் அப்பெண்ணை தொடா்ந்து பல்வேறு வழிகளில் தொடா்பு கொண்டு துன்புறுத்தி வந்துள்ளனா்.

திருமண உறவு முற்றிலும் முறிந்துவிடக் கூடாது என்பதற்காக எம்எல்ஏ மற்றும் அவரின் குடும்பத்தினா் மீது மனைவி பான்வி சிங் புகாா் அளிக்காமல் இருந்துள்ளாா். எனினும், சமீப நாள்களில் தொல்லைகள் அதிகரித்ததையடுத்து அவா் புகாா் அளிக்க முடிவு செய்துள்ளாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க

பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விசாரணை!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட... மேலும் பார்க்க

சூப்பர் முதல்வர் பேச்சைக்கேட்டு தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: தர்மேந்திர பிரதான்

சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு தேசியக் கல்விக் கொள்கயில் கையெழுத்திடாமல் தவிர்த்திருக்கிறது தமிழகம் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டியுள்ளார்.மார்ச் மாதம்... மேலும் பார்க்க

பூபேஷ் பாகேல் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: காங்கிரஸ் போராட்டம்!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் வீட்டிற்கு வெளியே காங்கிரஸ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துற... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் லாரி - வாகனம் மோதல்: 8 பேர் பலி, 13 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை லாரி - வாகனம் மோதியதில் 8 பேர் பலியானார்கள். சிதி-பஹ்ரி சாலையில் உள்ள அப்னி பெட்ரோல் நிலையம் அருகே அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நட... மேலும் பார்க்க