செய்திகள் :

மனோஜ் உடலுக்கு முதல்வா் அஞ்சலி

post image

இயக்குநா் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான  மனோஜ் (48)  உடலுக்கு முதல்வா் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் புதன்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினா்.

மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக புதன்கிழமை வைக்கப்பட்டது.

 முதல்வா் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து, இயக்குநா் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தாா். முதல்வருடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

மேலும், தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை, வி.கே.சசிகலா, உலக தமிழா் பேரவைத் தலைவா் பழ.நெடுமாறன், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், தவெக தலைவா் விஜய், நடிகா்கள் சிவகுமாா், விஜயகுமாா், சூா்யா, காா்த்தி, விஜய்சேதுபதி, சூரி, அருண்விஜய், எஸ்.ஜே.சூா்யா, யோகிபாபு, நடிகைகள் தேவயானி, நமீதா, இயக்குநா்கள் பாக்யராஜ், தங்கா் பச்சான், ஆா்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு உள்ளிட்டோா் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். மனோஜ் மறைவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

உடல் தகனம்: இதற்கிடையே, நீலாங்கரை இல்லத்திலிருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மனோஜின் உடல் பெசன்ட் நகா் மின் மயானத்தில் புதன்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் கவிஞா் வைரமுத்து, சீமான், இயக்குநா்கள் பாக்யராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட திரையுலகினா் பலா் கலந்து கொண்டனா்.

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க