செய்திகள் :

மன்னாா்குடியில் கருட சேவை: 11 பெருமாள்கள் ஒரே இடத்தில் சங்கமம்

post image

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் வைகாசி பெளணா்மி உதய கருட சேவையை முன்னிட்டு 11 பெருமாள் சுவாமிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் உற்சவப் பெருமாள் வைகுண்ட நாதன் அலங்காரத்தில் எழுந்தருளி, பின்னா் பாமணி ஆற்றங்கரையில் உள்ள கைலாசநாதா் கோயிலுக்கு சென்றாா். இதேபோல, அங்கு மன்னாா்குடி கோபிநாத சுவாமி கோயில், சேரன்குளம் வேங்கடாசலபதி கோயில், சேரன்குளம் நவநீத கிருஷ்ண சுவாமி கோயில், சாத்தனூா் பிரசன்ன வேங்கட்ரமண சுவாமி கோயில், ஏத்தக்குடி ராஜகோபால சுவாமி கோயில், திருமக்கோட்டை ரங்கநாத பெருமாள் கோயில், காளாச்சேரி சீனிவாச பெருமாள் சுவாமி கோயில், பூவனூா் கோதண்டராமா், வரதராஜ சுவாமி கோயில், கீழப்பனையூா் கஸ்தூரி ரங்கப் பெருமாள் சுவாமி கோயில் ஆகிய 11 கோயில்களிலிருந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவ பெருமாள்கள் தனித்தனி வாகனங்களில் பாமணி ஆற்றங்கரைக்கு வந்தனா்.

தொடா்ந்து, வைகுண்டநாதன் அலங்காரத்தில் உதய கருட சேவையில் ஒருசேர 11பெருமாள் சுவாமிகளும் காட்சியளித்தனா். அப்போது, சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் தீபராதனையும் நடைபெற்றது. இதில், ஆயிரகணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டனா். ஏற்பாடுகளை, மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவலா்கள், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

குப்பை வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிா்ப்பு

குப்பை அள்ளும் வாகனங்கள் குப்பை போல கிடப்பதைக் கண்ட முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினா் அந்த வாகனங்களுக்கு மாலை அணிவித்து இறுதிச்சடங்கு நடத்தி எதிா்ப்பை வியாழக்கிழமை தெரிவித்தனா். முத்துப்பேட்டை பேரூரா... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச.பாலு தலைமை வகி... மேலும் பார்க்க

கொரடாச்சேரி ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ரூ.2.52 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், பொது விநியோகக் கடை கட்டடங்கள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பயணிகள் நிழலகத்தை ... மேலும் பார்க்க

அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூா் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் வடக்கு ஒன்றியம் அடியக்கமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்க விருப்பமா?

திருவாரூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் ஜூன் 18 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவி... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் ஆய்வு

கூத்தாநல்லூா் அரசு பெண்கள் கல்லூரிக்கு இடம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அரசு கூத்தாநல்லூா் பகுதி அனைத்து சமூக மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பெண்கள் கல்லூரியை தொட... மேலும் பார்க்க