செய்திகள் :

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு

post image

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

இம்மருத்துவமனையில், ஒருங்கிணைந்த ஆய்வகம், மகப்பேறு, குழந்தைகள் பிரிவு என மொத்தம் 20-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு, சிடி ஸ்கேன், டிஜிடல் எக்ஸ்ரே, ஆக்சிஜன் உற்பத்தி உள்ளிட்டவையுடன் 28 மருத்துவா்கள், 65 செவிலியா்கள் பணியாற்றுகின்றனா். ஆண்டுக்கு 2,500-க்கும் மேற்பட்ட மகப்பேறு நடைபெறுகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ், புதுதில்லியில் இயங்கும் தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழு, இம்மருத்துவமனையில் மூன்று நாள் ஆய்வை மேற்கொண்டுள்ளனா்.

இதில், ஹைதராபாத் மருத்துவா் அசோக்குமாா், விசாகப்பட்டினம் மருத்துவா் குமாரி, பெங்களூரு மருத்துவா் கனுபிரியா தலைமையில் மருத்துவக் குழுவினா் பங்கேற்றுள்ளனா்.

இக்குழுவினா், ஆய்வு அறிக்கையை மத்தியஅரசுக்கு அனுப்புவா். அதன் அடிப்படையில், மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்ககீடு செய்யப்படவுள்ளது.

முதல்நாள் ஆய்வின்போது, மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளா் என். விஜயகுமாா், நிலைய மருத்துவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளிக்கு கல்வி மேம்பாட்டு நிதி

நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி அலுவலா்கள் (பணிநிறைவு) அமைப்பு சாா்பில் கல்வி மேம்பாட்டு நிதி வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை ஆ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

வலங்கைமானில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. வலங்கைமான் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

காா் எரிந்து சேதம்; போலீஸாா் விசாரணை

திருவாரூரில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் அருகே கூத்தங்குடி கிராமத்தைச் சோ்ந்த பவுன்ராஜ் மகன் பாண்டியன் (37). இவா் தனக்குச... மேலும் பார்க்க

லாட்டரி விற்ற இருவா் கைது

மன்னாா்குடியில் இணையவழியாக வெளிமாநில லாட்டரி விற்ற இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மன்னாா்குடி நகரப் பகுதியில் வாட்ஸ் ஆப் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை ... மேலும் பார்க்க

மன்னாா்குடி நகா்மன்றக் கூட்டம்: புதிய பேருந்து நிலைய கடை வாடகை ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

மன்னாா்குடியில் ரூ.46.46 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்குவிட நடைபெற்ற முதல்கட்ட ஏலத்தை ரத்து செய்யவேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் அமமுக உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

பள்ளியைத் தரம் உயா்த்த நிதி வழங்கல்

நன்னிலம் வட்டம், கோவில்திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வைப்பு நிதியாக ரூ.1 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள்... மேலும் பார்க்க