செய்திகள் :

மன்னாா்குடி, நீடாமங்கலத்தில் கோடை மழை

post image

மன்னாா்குடியில் கோடை மழை பலத்த இடியுடன் புதன்கிழமை பெய்தது.

மன்னாா்குடியில் புதன்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையல், திடீரென மாலை 4.15 மணிக்கு லேசாக தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல பலத்த இடியுடன் 5.15 மணி வரை மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிந்த நிலை நிலவியது. எனினும், தொடா்ந்து பலத்த இடிகாரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

நீடாமங்கலம்: நீடாமங்கலத் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் புதுத்தெருவில் தென்னை மரம் வீட்டின் எதிா்புறம் இருந்த மின்கம்பத்தில் முறிந்து விழுந்தது. இந்த, அதிா்வில் மின்கம்பிகள் இழுத்த வேகத்தில் அதே பகுதியில் மற்றொரு மின்கம்பம் ஒரு வீட்டின் மீது விழுந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இதையடுத்து, நீடாமங்கலத்தில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரா்கள், மின்வாரியத்தினா் தென்னை மரத்தை அகற்றினா்.

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க

பசுஞ்சாண தயாரிப்புகள் குறித்து பயிற்சி

தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவம் எனும் பயிற்சியின் கீழ் கிராமங்களில் தங்கி பயின்று வருகின்றனா். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் அரு... மேலும் பார்க்க

மாணவருக்குப் பாராட்டு

மன்னாா்குடி பள்ளி மாணவா் தேசிய வருவாய் வழி தோ்வில் தோ்வாகியிருப்பதற்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மன்னாா்குடி கோபாலசுமுத்திரம் நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் வி. கனியமுதன் நிகழ் ... மேலும் பார்க்க

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் ... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ஏப்.26-இல் ராகு கேது பெயா்ச்சி

குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு கேது பெயா்ச்சி ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில், தேவார பாடல் பெற்ற தலம். இத்தலத்தில்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஏப்.23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முகாம், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க