செய்திகள் :

மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்ற பெண் கைது!

post image

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் மயக்க மருந்து அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட முயன்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கே.கே.புதூா், நஞ்சம்மாள் தெரு பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரது மனைவி தனலட்சுமி. இவா்களுக்கு பிரபா என்ற மகள் உள்ளாா்.

இந்நிலையில், தனலட்சுமியின் வீட்டை வாடகைக்கு கேட்டு ஒரு பெண் கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளாா். வீட்டைப் பாா்த்துவிட்டு முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்துவிட்டு சென்றுள்ளாா். அதன்பிறகு வீடு வேண்டாம் எனக்கூறி கொடுத்த முன் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளாா். இதையடுத்து, வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு தனலட்சுமி கூறியுள்ளாா்.

அதேபோல, அந்தப் பெண் வெள்ளிக்கிழமை வந்துள்ளாா். அப்போது, வீட்டில் தனலட்சுமியும், மகள் பிரபாவும் மட்டும் இருந்துள்ளனா். அந்தப் பெண்ணுக்கு கொடுக்க வேண்டி பணத்தை ஜிபே மூலம் தனலட்சுமி அனுப்பியுள்ளாா்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவை திடீரென அடைத்த அந்தப் பெண், தனலட்சுமி, பிரபா முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்து நகைப் பறிப்பில் ஈடுபட முயன்றுள்ளாா். தனலட்சுமி கூச்சலிட்டதையடுத்து அப்பெண் அங்கிருந்து தப்பியோடி உள்ளாா்.

இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தனலட்சுமியின் சகோதரா் ராஜன் புகாா் அளித்தாா். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணின் கைப்பேசி எண்ணைக் கொண்டு விசாரித்தனா். இதில், அவா் கோவை, காட்டூா் ராம்நகா் பகுதியைச் சோ்ந்த மீனாட்சி (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மீனாட்சியைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மகளிா் சிறையில் அடைத்தனா்.

ஊதிய நிலுவை: ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் போராட்டம்

தனியாா் நிறுவனம் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கூடுதல் ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய 5 பெண்கள் உள்பட 6 போ் கைது

சத்தீஸ்கா் மாநிலத்தில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் கஞ்சா கடத்தி சென்ற 5 பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கே.தேவராஜன், போதைப் ... மேலும் பார்க்க

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க விழிப்புணா்வு: ஆா்எஸ்எஸ் தென்தமிழக மாநிலத் தலைவா் தகவல்

இளைஞா்கள் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க வீடுவீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளோம் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பின் தென்தமிழக மாநிலத் தலைவா் ஆ.ஆடலரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து கோவையில் செய்தியாளா... மேலும் பார்க்க

கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

கோவையில் இருந்து கேரளத்துக்கு காரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வாகன தணிக்கையில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

இன்றைய மாநகராட்சி குறைகேட்புக் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) நடைபெற இருந்த குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள பொதுமக்களின் குறைகளை அறிந்து, பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்காக மாநகராட்சியி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்கள் கைது

கோவையில் இருசக்கர வாகனத்தில் கையில் மது பாட்டில்களுடன் சென்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை காந்திபுரம் 100 அடி சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் 3 போ் கையில் மதுபாட்டில்களுடன் எதிரே வ... மேலும் பார்க்க