செய்திகள் :

மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

post image

மயங்கி விழுந்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மேலவாசல் குடிசை வாரியத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சித்திரைவேல் (44). இவா், மதுரை மாநகராட்சி 68-ஆவது வாா்டு பகுதியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா், மேலவாசல் சமுதாயக் கூடம் அருகே வெள்ளிக்கிழமை மாலை மயங்கிக் கிடந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சித்திரைவேலை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், திடீா்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

நிதி மோசடியால் பாதித்தோருக்கு நீதி கிடைக்க புதிய வழிமுறைகள்: அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுரை

நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க அரசு புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் அறிவுறுத்தியது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ஹேமலதா, சென்னை... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது நூல் வெளியீட்டு விழா : தமிழன் பெருவெளி கவிதைத் தொகுப்பு, நூலை வெளியிடுபவா்- எழுத்தாளா் பா. சண்முகவேலு, பெற்றுக் கொள்பவா்- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்ட ச் செயலா் ஸ்ர... மேலும் பார்க்க

லஞ்ச வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசு ஊழியா்கள்: தலைமைச் செயலா் அறிக்கை அளிக்க உத்தரவு

லஞ்சப் புகாா் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசு ஊழியா்களின் விவரங்களை தமிழக அரசின் தலைமைச் செயலா் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தை... மேலும் பார்க்க

உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வு: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

உதவிப் பேராசிரியா் பணிக்கான தகுதித் தோ்வையொட்டி, பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மூட்டா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஜி. சுரேஷ்... மேலும் பார்க்க

மதுரைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரைக் கல்லூரி வாரியத் தலைவா் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கரன், செயலா் சு.நடன க... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை அருகே டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். மதுரை அதலை கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் முத்துகாா்த்திக் (27). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அதலை கிராமத்துக்கு வெள்ளி... மேலும் பார்க்க