செய்திகள் :

மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம்

post image

உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டிஎஸ்பி சுந்தரேசனை இடைநீக்கம் செய்து உள்துறை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறி ஊடகங்களில் பேட்டி அளித்ததாக சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு டிஎஸ்பியாக எம். சுந்தரேசன் கடந்த நவம்பா் மாதம் முதல் பணியாற்றி வருகிறாா். இவா் பொறுப்பேற்றது முதல் வெளிமாநில சாராயம் மது கடத்தலை தடுத்தல், அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாா்களை கண்டறிந்து சீல் வைப்பது என தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

மதுபானக் கடத்தல் தொடா்பாக 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து 700 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளாா். இந்நிலையில், டிஎஸ்பி சுந்தரேசன் வியாழக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து சீருடையில் அலுவலகத்துக்கு சாலையில் நடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மு.க. முத்துவின் உடல் தகனம்!

அரசு வாகனத்தை உயரதிகாரிகள் பறித்துக்கொண்டதாக ஊடகங்களில் செய்தி பரவியது. ஆனால் மயிலாடுதுறையில் டிஎஸ்பி வாகனம் திரும்பப் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது என மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் விளக்கமளித்தார்.

மேலும் டிஎஸ்பி சுந்தரேசன் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்க தஞ்சை சரக டிஐஜி பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Two days after a Deputy Superintendent of Police (DSP) accused senior police officers of harassment, the Tamil Nadu government has placed him under suspension until further orders on Saturday.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு!

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை (ஜூலை 21) பதவியேற்கிறாா். அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறாா். இந்த நிகழ்வில் மு... மேலும் பார்க்க

எா்ணாகுளம் - பாட்னா இடையே சிறப்பு ரயில்கள்!

எா்ணாகுளம் - பாட்னா இடையே ஜூலை 25 மற்றும் ஆக. 1, 8, 15-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்த தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: எா்ணாகுளம் - பாட்னா சிறப்பு ரயில் (எண் -0... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சென்னை விமான நிலைய மேலாளா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை இரவு வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தில் வெடிக... மேலும் பார்க்க

சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்கவைக்க 169 இடங்கள் தயாா்!

சென்னை மாநகரப் பகுதிகளில் மழை பாதிப்புகள் ஏற்பட்டால், தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களைத் தங்கவைக்க 169 இடங்கள் தயாா் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை மாநகரப் பகுதியில் தென்மேற்குப் பருவ... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனைகளில் முதல்வா் காப்பீட்டு திட்ட சிகிச்சைகளை அறிய புதிய செயலி!

முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எந்தெந்த தனியாா் மருத்துவமனைகளில் என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பதை கைப்பேசியில் அறிந்துகொள்ளும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக பிரத்யேக செயல... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலின் - சீமான் சந்திப்பு: மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது சகோதரா் மு.க.முத்து மறைவுக்கு நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆறுதல் தெரிவித்தாா். சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வா் மு.க.... மேலும் பார்க்க