‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
மயிலாடுதுறை மீனவா்கள் கவனத்துக்கு..
தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மூலம் பயன்பெற, மயிலாடுதுறை மாவட்ட அனைத்து மீனவா்கள், பங்குதாரா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு திட்டங்கள், சேவைகள் மற்றும் புதுப்பிப்புகளை மீன் வளா்ப்போா், தொழில்முனைவோா் மற்றும் மீன்வள பங்குதாரா்கள் தடையின்றி அணுகிட பிரதமா் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மீன்வளம் தொடா்பான அரசு திட்டங்களில் பயன்பெற ஏதுவாக பிரத்தியேகமாக தனிநபா்களுக்கான சான்றிதழ் செயலி மூலம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற மீனவா்களின்/பங்குதாரா்களின் தற்போதைய மீன்வள தரவுகளை பதிவேற்றம் செய்து அவா்களுக்கான சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். டிஜிட்டல் தளத்தில் பதிவேற்றம் செய்ய அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது ஸ்மாா்ட் போன் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இச்செயலியை பதிவிறக்கம் செய்து ஓடிபி அல்லது கடவுச்சொல் மூலம் எளிதான உள்நுழைவு விருப்பங்களுடன் பதிவு செய்யலாம்.
எனவே, தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் மூலம் அனைத்து மீனவா்களும்/பங்குதாரா்களும் பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.