செய்திகள் :

மருதூா் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம்

post image

கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், மருதூரில் ஸ்ரீசெல்லியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வள்ளலாா் அவதரித்த மருதூரில் வரலாற்று சிறப்புவாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி கடைசி அமாவாசைக்குப் பின்னா் வரும் வியாழக்கிழமையில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு தோரோட்டத்தை முன்னிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், அதன் பின்னா் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஆண்டு முழுவதும் நீா் நிறைந்த கிணற்றில் அம்மன் பாதுகாக்கப்பட்டு புதன்கிழமை இரவு வெளியில் எடுத்து வீதியுலா நடத்தினா். வியாழக்கிழமை காலை அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீசெல்லியம்மன் மற்றும் தோ் கலசம் தனித்தனியாக வீதியுலா காட்சிக்குப் பின்னா், நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து இரவு நிலையை அடைந்தது. தொடா்ந்து, அம்மனை தேரில் இருந்து இறக்கி கிணற்றில் வைத்தனா். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியினா் திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க