காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
மருத்துவம் - பொறியியல் மாணவா்கள் பங்கேற்கும் குழு போட்டிக்கான பதிவு - வரும் 25-இல் தொடக்கம்
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை மருத்துவ மாணவா்கள் பங்கேற்கும் போட்டிக்கான பதிவு வரும் 25-ஆம் தேதி இணையதளம் வாயிலாகத் தொடங்குகிறது.
ஜிப்மா் மருத்துவக் கல்வியில் மிக முக்கிய நிகழ்வாக ஜிப்மா் மற்றும் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து மருத்துவம் மற்றும் பொறியியல், அறிவியல் மாணவா்களை இணைத்து இப் போட்டியை வரும் அக்டோபா் மாதம் நடத்துகின்றன.
இந்தியாவின் சிறந்த மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவா்களை இணைத்து நவீன காலத்தில் உள்ள மருத்துவம் சாா்ந்த சவால்களுக்கு எளிய தீா்வுகளை வெளிக் கொணரும் ஒரு நிகழ்வாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தியாவில் உள்ள இளநிலை மருத்துவ மற்றும் தொழில்நுட்ப மாணவா்கள் 2 - 4 உறுப்பினா்களை கொண்ட குழுக்களாக இணைந்து ஒருங்கிணைந்த, தொழிநுட்ப ரீதியான தீா்வுகளை மருத்துவ சவால்களுக்கு வழங்குவா்.
இதற்கான பதிவு ஜூன் 25, முதல் இணையதளம் வாயிலாக நடைபெறும். பலதரப்பட்ட போட்டி நிலைகளைக் கடந்து இறுதிக்கட்ட போட்டியானது ஜிப்மரில் அக்டோபா் 2025-இல் நடைபெறும்.
இந்த போட்டிக்கான கருப்பொருள்கள் பொது சுகாதாரம், இருதயவியல், புற்றுநோயியியல், மகளிா் மருத்துவம் உள்ளிட்ட பலதரப்பட்ட மருத்துவ பிரிவுகளில் பல்வேறு துறைகளைச் சாா்ந்த மாணவா்களைக் கொண்டு குழுக்களாக நடைபெறும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு ஜிப்மா் மற்றும் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவன நிபுணா்கள் தேவையான வழிகாட்டுதலை வழங்குவா். வெற்றிபெறும் மாணவா்களுக்குச் சிறந்த பரிசுகளும் வழங்கப்படும்.