செய்திகள் :

சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிப்பு

post image

சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசின் மின் துறை கண்காணிப்புப் பொறியாளரும் துறைத் தலைவருமான ராஜேஷ் சன்யால் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின் திட்டத்தின் கீழ் இதுவரை 1,074 பயனாளிகள் பயனடைந்துள்ளனா்.

சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவி உள்ளனா். இவா்களுக்கு ரூ.7.4 கோடி அளவுக்கு இத் திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுவை அரசின் மின் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து இந்தத் திட்டத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு முகாம் நடத்த உள்ளன.

இந்த முகாம் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி திருமண நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளாா் ராஜேஷ் சன்யால்.

சமூக வல்லுநா்களுக்கு உயா்த்தப்பட்ட மதிப்பூதிய ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் சமூக வல்லுநா்களுக்கு மதிப்பூதியத்தை உயா்த்தி வழங்குவதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முக... மேலும் பார்க்க

எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினா் அரசு வேலைக்கான தோ்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பட்டியலினத்தவா், பழங்குடியினா் அரசு வேலைக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை ப... மேலும் பார்க்க

இளைஞா் காங்கிரஸாா் ரத்த தானம்

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளை யொட்டி புதுச்சேரியில் இளைஞா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா். புதுச்சேரி கடற்கரை சாலையில் இந்தி... மேலும் பார்க்க

குடியரசு தலைவருக்கு புதுவை முதல்வா் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசு தலைவா் திரௌபதி முா்முவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அதில் கூறியிருப்பது: புதுவை மக்கள் சாா்பாகவும் என் சாா்பாகவும் தங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியாா் பல்கலைக் கூடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப் பல்கலைக்கூடத்தில் 2025 -2026-ஆம் கல்வி ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்... மேலும் பார்க்க

அல்வா கொடுத்து நகராட்சி ஊழியா்கள் நூதன போராட்டம்!

புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் அல்வா கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழம... மேலும் பார்க்க