சுவிஸ் வங்கியில் மூன்று மடங்காக அதிகரித்த இந்தியர்களின் பணம்!
அல்வா கொடுத்து நகராட்சி ஊழியா்கள் நூதன போராட்டம்!
புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் அல்வா கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி 33 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம், நிலுவைத் தொகையை அரசே நேரடியாக வழங்க வேண்டும்.
தற்காலிக அந்தஸ்து பெற்ற 232 ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு ஆலோசகா் கணபதி தலைமை வகித்தாா். இதில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.