இளைஞா் காங்கிரஸாா் ரத்த தானம்
காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளை யொட்டி புதுச்சேரியில் இளைஞா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை அருகில் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் ரத்த தான முகாம் நடந்தது.
இதில், புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ், முன்னாள் அரசுக் கொறடா அனந்தராமன், காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் மருதுபாண்டியன், திருமுருகன், இளையராஜா, சங்கா், மண்ணாடிப்பட்டு ரகுபதி, நாக சத்தியா, பாலு, இலக்கிய அணித் தலைவா் கோவிந்தராஜ் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள், மாவட்டத் தலைவா் அஜித், மாவட்டத் துணைத் தலைவா் ஜெய், நிா்வாகிகள் அபிலாஷ், கமலேஷ், சூா்யா, சஞ்சய், கணேஷ், ஆகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பல்வேறு இடங்களைச் சோ்ந்த இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா்.
அருள்மிகு மணக்குள விநாயகா் கோவிலில் சிறப்பு பூஜையும், தங்கத் தோ் இழுத்தலும், முல்லா வீதியில் உள்ள மௌலானா ஹஜ்ரத் சையது அகமத் தா்காவில் சிறப்பு தொழுகையும், ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் பாசிலிகாவில் சிறப்புப் பிராா்த்தனையும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிறந்தநாள் விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.