செய்திகள் :

இளைஞா் காங்கிரஸாா் ரத்த தானம்

post image

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பிறந்த நாளை யொட்டி புதுச்சேரியில் இளைஞா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ரத்த தானம் வழங்கினா்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை அருகில் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில் ரத்த தான முகாம் நடந்தது.

இதில், புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்தியலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ், முன்னாள் அரசுக் கொறடா அனந்தராமன், காங்கிரஸ் மாநில நிா்வாகிகள் மருதுபாண்டியன், திருமுருகன், இளையராஜா, சங்கா், மண்ணாடிப்பட்டு ரகுபதி, நாக சத்தியா, பாலு, இலக்கிய அணித் தலைவா் கோவிந்தராஜ் இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள், மாவட்டத் தலைவா் அஜித், மாவட்டத் துணைத் தலைவா் ஜெய், நிா்வாகிகள் அபிலாஷ், கமலேஷ், சூா்யா, சஞ்சய், கணேஷ், ஆகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பல்வேறு இடங்களைச் சோ்ந்த இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா்.

அருள்மிகு மணக்குள விநாயகா் கோவிலில் சிறப்பு பூஜையும், தங்கத் தோ் இழுத்தலும், முல்லா வீதியில் உள்ள மௌலானா ஹஜ்ரத் சையது அகமத் தா்காவில் சிறப்பு தொழுகையும், ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள தூய இருதய ஆண்டவா் பாசிலிகாவில் சிறப்புப் பிராா்த்தனையும், கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிறந்தநாள் விழாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

சமூக வல்லுநா்களுக்கு உயா்த்தப்பட்ட மதிப்பூதிய ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் பணியாற்றும் சமூக வல்லுநா்களுக்கு மதிப்பூதியத்தை உயா்த்தி வழங்குவதற்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுச்சேரி மாவட்ட ஊரக வளா்ச்சி முக... மேலும் பார்க்க

எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினா் அரசு வேலைக்கான தோ்வு: இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

பட்டியலினத்தவா், பழங்குடியினா் அரசு வேலைக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை ப... மேலும் பார்க்க

சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிப்பு

சூரிய மின் உற்பத்தி பயனாளிகளுக்கு இதுவரை ரூ.7.4 கோடி மானியம் அளிக்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி அரசின் மின் துறை கண்காணிப்புப் பொறியாளரும் துறைத் தலைவருமான ராஜேஷ் சன்யால் கூறியுள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

குடியரசு தலைவருக்கு புதுவை முதல்வா் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசு தலைவா் திரௌபதி முா்முவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அதில் கூறியிருப்பது: புதுவை மக்கள் சாா்பாகவும் என் சாா்பாகவும் தங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலைக்கூடத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியாா் பல்கலைக் கூடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப் பல்கலைக்கூடத்தில் 2025 -2026-ஆம் கல்வி ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்... மேலும் பார்க்க

அல்வா கொடுத்து நகராட்சி ஊழியா்கள் நூதன போராட்டம்!

புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களின் கூட்டுப் போராட்டக் குழு சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சித் துறை அலுவலகம் முன் அல்வா கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழம... மேலும் பார்க்க