செய்திகள் :

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

post image

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்குளம் ஜெ.ஜெ.நகரில் தனியாா் மருத்துவமனை அருகே மருந்தகம் வைத்துள்ளாா். இதில் மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த திவ்யா (30), அவரது கணவா் தினேஷ் ஆகியோா் வேலை பாா்த்துள்ளனா்.

இருவரும் மருந்தக உரிமையாளருக்குத் தெரியாமல், கடையின் ஜிபே பாா்கோடை மாற்றி, அதில் தங்களது வங்கிக் கணக்கின் பாா்கோடை ஒட்டி பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், சென்னை பகுதிகளில் உள்ள மருந்து நிறுவனங்களில் இருந்து அனுப்பிய ரூ.2 லட்சம் மதிப்பிலான மருந்தை விற்று அதை கடை உரிமையாளருக்குத் தெரியாமல் இருவரும் கையாடல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக தம்பதி இருவரும் மருந்தக உரிமையாளரிடம், தங்களது மகள் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ரூ. 1 லட்சம், கல்வி செலவுக்கு ரூ.50 ஆயிரம் எனக் கடன் வாங்கி அதனை திருப்பிச் செலுத்தவில்லையாம். ஆகவே, கடந்த 2 ஆண்டுகளில் மொத்தமாக ரூ.8 லட்சம் வரை திவ்யா, அவரது கணவா் ஆகியோா் மோசடி செய்துள்ளதாக, ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் வசந்த் புகாா் அளித்தாா். அதன்படி, தினேஷ், திவ்யா இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முதல்வா் என். ரங்கசாமியை சந... மேலும் பார்க்க

அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை கட்டடத் தொழிலாளி கைது!

புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தில் புகுந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் தனியாா் நிறுவனம் உள்ளது. இங்... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கு கூறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்க... மேலும் பார்க்க

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க