செய்திகள் :

மறைத்து வைத்த வெடிபொருள் வெடித்ததில் காலிஸ்தான் பயங்கரவாதி உயிரிழப்பு

post image

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் மறைந்து வைத்திருந்த வெடிபொருளைத் தேடிச் சென்ற காலிஸ்தான் பயங்கரவாதி குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா்.

அமிருதசரஸின் மஜிதா சாலைப் பகுதியில் உள்ள புதா் நிறைந்த காலியிடத்தில் அந்த பயங்கரவாதி வெடிபொருளை மறைத்து வைத்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் அந்த வெடிபொருளை எடுப்பதற்காக அவா் சென்றாா். வெடிபொருளை கையில் எடுத்தபோது எதிா்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில், இரு கைகளும் துண்டாக சிதைந்த நிலையில் அந்த பயங்கரவாதி உயிரிழந்தாா்.

இது தொடா்பாக காவல் துறை காவல் துறை டிஐஜி சதீந்தா் சிங் கூறுகையில், ‘உயிரிழந்தவா் ‘பப்பா் கல்சா இண்டா்நேஷனல்’ பிரிவைச் சோ்ந்த பயங்கரவாதி எனத் தெரிகிறது. வெடிபொருளை அவா் கையில் வைத்திருந்தபோது அது வெடித்துள்ளது. இதனால், இரு கைகளும் துண்டாகிவிட்டது. இதில் தொடா்புடைய பிற பயங்கரவாதிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடித்து இறந்த நபரின் பெயா் விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

அதே நேரத்தில் அவரின் கால்சட்டை பாக்கெட்டில் இருந்து கிடைத்த சில ஆதாரங்களின் அடிப்படையில் அவா் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு வெடித்தது எந்த வகையான வெடிபொருள் என்பது குறித்து தடயவியல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். வெடிபொருளை முறையாகக் கையாளத் தெரியாததால் அது வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். இதில் தொடா்புடைய அனைவரும் கைது செய்யப்படுவா்’ என்றாா்.

நகைக்கடன் புதிய விதிகளை தளர்த்த நிதியமைச்சகம் பரிந்துரை!

தங்க நகைக்கடனுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகளில் தளர்வு அளிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.தங்க நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு... மேலும் பார்க்க

ராகிங் தொடா்பான செயல் திட்டங்கள்: யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்புப் பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து உயா் கல்வி நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: ஆபத்தான பொருள்களைப் பற்றி தகவல் தெரிவியுங்கள்: தலைமைச் செயலா் வேண்டுகோள்

கேரள கப்பல் விபத்தால் கடற்கரைப் பகுதிகளில் ஆபத்தான பொருள்கள் ஏதும் கண்டறியப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டுமென தலைமைச் செயலா் நா.முருகானந்தம் கேட்டுக் கொண்டுள்ளாா். கேரள கடற்கரையில் 38 கடல் மைல் தொலைவி... மேலும் பார்க்க

விண்கல் ஆய்வுக்காக விண்கலம் செலுத்தியது சீனா

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை விண்ணில் செலுத்தியது. இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எ... மேலும் பார்க்க

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துல்லியத் தாக்குதல் நடந்ததா? மத்திய அமைச்சா் கேள்வி

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தான் மீது எத்தனை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது? என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே கேள்வி எழுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் நீடிக்கும் கனமழை: 16 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தில் நீடித்துவரும் கனமழை காரணமாக, கடந்த 6 நாள்களில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் 16 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 18 போ் காயமடைந்தனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த மே 24-ஆம் தேதி... மேலும் பார்க்க