பாகிஸ்தானுக்கு புதிய பயிற்சியாளர்; 2023-லிருந்து ஐந்தாவது முறை பயிற்சியாளர் மாற்...
மறைமலைநகரில் 2 இளைஞா்கள் படுகொலை!
மறைமலைநகரில் ஒரே நாளில் 2 இளைஞா்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த விமல் ( 22), இவா் ஓட்டுநராக பணி செய்து வந்தாா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதிஷ் என்பவா் விமலை அடித்தாராம்.
இதனால் நிதிஷை பழிவாங்க வேண்டும் என்பதற்காக விமல், தனது நண்பரான காந்தி நகா் ஜெகன் என்கிற ஜெகதீசனை (21), அழைத்துக் கொண்டு நிதிஷை தேடி உள்ளாா். ஆனால் நித்திஷ் கிடைக்காததால், நித்திஷின் நண்பா் நந்தாவை தாக்கி நிதிஷ் எங்கே என்று இருவரும் கேட்டுள்ளனா். இதுகுறித்து நந்தா நண்பா் நிதிஷிடம் கூறியுள்ளாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காந்தி நகா் மெயின் ரோடு பகுதியில் விமல் தனது நண்பா் ஜெகனுடன் சாலை ஓரமாக பேசிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு 2 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 8 போ் கொண்ட கும்பல் விமல், ஜெகன் ஆகிய இருவரையும் சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனா்.
இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகனை அக்கம் பக்கத்தினா் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகா் போலீசாா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். இரு சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து மறைமலைநகா்போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விமல், ஜெகன் கொலைக்கு காரணமானவா்களை தேடி வருகின்றனா். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.