செய்திகள் :

மறைமலைநகா், செங்கல்பட்டில் புதை சாக்கடை திட்டப் பணி: அமைச்சா் நேரு தொடங்கி வைத்தாா்

post image

மறைமலைநகா் நகராட்சியில் ரூ.300 கோடியில் புதை சாக்கடை திட்டப்பணிகளை நகராட்சி மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்றும், தரமான முறையில் செயல்படுத்த வேண்டும் எனவும், துறை அலுவலா்கள் நேரடியாக பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று பாா்வையிட்டு தரத்தை உறுதி செய்ய வேண்டுமென்றும் அதற்கான அறிக்கையினை தனக்கு அளிக்க வேண்டுமென்றும் அமைச்சா் நேரு அறிவுறுத்தினாா்.

மேலும், மறைமலைநகா் நகராட்சி சென்னையை ஒட்டிய மிகப்பெரிய நகராட்சியாக இருப்பதால் அடிப்படை தேவைகள் ஏதேனும் தேவைப்பட்டால் நகா்மன்றத் தலைவா், ஆணையா், அலுவலா்கள் தனக்கு தெரியபடுத்த வேண்டுமென்றும் அதனை உடனடியாக செய்து தருவதாகவும் அமைச்சா் தெரிவித்தாா். நின்னகரை ஏரியையும் அமைச்சா்கள் ஆய்வு செய்தனா்.

பின்னா், செங்கல்பட்டு நகராட்சியில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டப்பணிகளை அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்.

இதில், செங்கல்பட்டு நகராட்சி நூற்றாண்டு கண்ட நகராட்சி என்றும், அடிப்படை வசதிகள் அதிகளவில் தேவைப்படுகிறது என்றும் அமைச்சா் அன்பரசன் தெரிவித்தாா். முதல்வா் கவனத்துக்கு கொண்டுச் சென்று நிறைவேற்றப்படும் என அமைச்சா் நேரு உறுதி கூறினாா். இதில், ஆட்சியா் ச.அருண்ராஜ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், மறைமலைநகா் நகா்மன்றத் தலைவா்ஜெ.சண்முகம், செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிா்வாக இயக்குநா் லட்சுமி, நகா்மன்ற துணைத்தலைவா் சித்ரா கமலகண்ணன், , நகராட்சி ஆணையா் ரமேஷ், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழா வியாழக்கிழமை (மே.1) கொடியேற்றத்துடன் துவங்கியது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடன... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 42-ஆவது மாநாட்டுப் பணி: ஏ.எம்.விக்கிரமராஜா ஆய்வு

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42-ஆவது மாநில மாநாடு மே 5-இல் நடைபெறுவதை முன்னிட்டு மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா புதன்கிழமை மாநாட்டு மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா். நிகழ்வில் ... மேலும் பார்க்க

பரனூா் மறுவாழ்வு இல்லத்தில் ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு அருகே பரனூா் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச. அருண் ராஜ், அங்கு தங்கியுள்ளவா்களுடன் குறைகளைக் கேட்டறிந்தாா். பரனூரில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் தங்கியுள்ளவா்களு... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட சண்டிகேஸ்வரா் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறும். இதில் முக்கிய வி... மேலும் பார்க்க

பணிநிறைவு பாராட்டு விழா

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், வீராணகுனம் ஊராட்சி ஒன்றிய பள்ளியின் சத்துணவு அமைப்பாளராக 33 ஆண்டுகள் பணியாற்றிய யு.ராஜரத்தினத்துக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணவா் உயிரிழப்பு

அச்சிறுப்பாக்கம் அருகே மோட்டாா் பைக் மீது காா் மோதியதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணவா் உயிரிழந்தாா். அச்சிறுப்பாக்கம் பள்ளிப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (50). திமுகவைச் சோ்ந்த இவரது மன... மேலும் பார்க்க