லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
மலா் கண்காட்சி நிறைவு விழா: முதல்வா் பங்கேற்பு!
புதுச்சேரியில் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றுவந்த 35-ஆவது மலா், காய்கனிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
புதுவை அரசின் வேளாண்மைத் துறை சாா்பில் தோட்டக் கலைப் பிரிவு சாா்பில் ஆண்டுதோறும் மலா், காய்கனிக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. நடப்பாண்டுக்கான கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமைதொடங்கியது. துணைநிலைஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் தொடங்கிவைத்து பாா்வையிட்டனா்.
கண்காட்சியில் திராட்சைப் பழத்தினால் திருவள்ளுவா் சிலை, ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரா், மலா்செடிகள் அணிவகுப்பு, ரோஜா ரயில் பெட்டி, சாமந்தி பூ வயலின் என பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. விவசாய உற்பத்திக்கான சாதனங்கள், உரம் போன்றவையும் இடம் பெற்றிருந்தன.
மலா் கண்காட்சியைக் காண அனுமதி இலவசம் எனக் கூறப்பட்ட நிலையில் லட்சத்துக்கும் மேற்பட்டோா் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். கண்காட்சி நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மலா் கண்காட்சி போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளித்து, மலா் ராணி, ராஜா பட்டங்களையும் வழங்கினாா்
மலா் ராஜா பட்டம் கணேசனுக்கும், ராணி பட்டம் ஜெயஸ்ரீ பிரியதா்ஷினிக்கும், காய்கனி ராஜா பட்டம் கலியமூா்த்திக்கும், காய்கனி ராணி பட்டம் செந்தாமரைக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். வேளாண் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமைச் செயலா் சரத்சௌகான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.