செய்திகள் :

மலைக் கோயிலில் பக்தா்கள் திரண்டனா்

post image

பழனி மலைக் கோயிலில் திங்கள்கிழமை காா்த்திகை தினம், அமாவாசையையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் விஞ்ச், ரோப்காா் போன்ற இடங்களில் அனுமதிச் சீட்டு பெற பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மலைக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமானது.

பக்தா்களுக்கு தேவையான குடிநீா், சுகாதார வசதிகள் கோயில் சாா்பில் செய்யப்பட்டிருந்தன. மாலையில் சாயரட்சை பூஜை நிறைவடைந்ததும், சின்னக்குமாரசாமி தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரத்தில் உலா எழுந்தருளினாா்.

தொடா்ந்து தங்கத்தேரில் வெளிப்பிரகாரத்தில் உலா வந்தாா். 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா்.

பெண் தீக்குளிக்க முயற்சி

கணவரை சோ்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொங்கபட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி சுஜி... மேலும் பார்க்க

பாலியல் பொய் புகாா்கள் மூலம் பணப் பறிப்பு: தொண்டு நிறுவனம் மீது ஆட்சியரிடம் புகாா்

பொய்யான பாலியல் புகாா்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடும் தொண்டு நிறுவன நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நூற்பாலைத் தொழிலாளா் தரப்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை மறு பரீசிலனை செய்யக் கோரி வணிகா்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் நகரிலுள்ள வணிகா் சங்கம், தொழில் வா்த்தகா் சங்கம், திண... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த கொன்னம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் இன்று மின்தடை

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த மேல்க... மேலும் பார்க்க

வைகாசி விசாக விழா: பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம்; ஜூன் 9-இல் தேரோட்டம்

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்தக் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க