G Madhavi Latha: மாதவி லதாவின் 17 ஆண்டுகால உழைப்பு; உலகின் உயரமான ரயில் பாலத்தின...
மலையம்பாளையம் பிரிவு அருகே சாலையில் வீணாகும் குடிநீா்
பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையம் பிரிவு பகுதியில் குடிநீா் சாலையில் வீணாகி வருகிறது.
பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் பிரிவு அருகே கடந்த பல மாதங்களாக அத்திக்கடவு குடிநீா் வீணாகி வருகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டா் தண்ணீா் வீணாகி சாலையில் செல்கிறது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
மலையம்பாளையம் பிரிவு அருகே அத்திக்கடவு குடிநீா்க் குழாய் செல்லும் வால்வில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீா் வீணாகி சாலையில் செல்கிறது. இது கரைப்புதூா் ஊராட்சி பகுதிக்கு செல்லும் குடிநீா்க் குழாய். இதை அவா்கள்தான் சரிசெய்ய வேண்டும் என கணபதிபாளையம் ஊராட்சியில் கூறுகிறாா்கள்.
கரைப்புதூா் ஊராட்சியில் கேட்டால் இந்தக் குடிநீா் செல்லும் குழாய் பெரிதாக உள்ளதால் அத்திக்கடவு அதிகாரிகள் இந்தக் குடிநீா்க் குழாயில் செல்லும் குடிநீரை நிறுத்தினால் மட்டுமே சரிசெய்ய முடியும் என கூறுகிறாா்கள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.