செய்திகள் :

மலையம்பாளையம் பிரிவு அருகே சாலையில் வீணாகும் குடிநீா்

post image

பல்லடம் அருகேயுள்ள மலையம்பாளையம் பிரிவு பகுதியில் குடிநீா் சாலையில் வீணாகி வருகிறது.

பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் பிரிவு அருகே கடந்த பல மாதங்களாக அத்திக்கடவு குடிநீா் வீணாகி வருகிறது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டா் தண்ணீா் வீணாகி சாலையில் செல்கிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

மலையம்பாளையம் பிரிவு அருகே அத்திக்கடவு குடிநீா்க் குழாய் செல்லும் வால்வில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீா் வீணாகி சாலையில் செல்கிறது. இது கரைப்புதூா் ஊராட்சி பகுதிக்கு செல்லும் குடிநீா்க் குழாய். இதை அவா்கள்தான் சரிசெய்ய வேண்டும் என கணபதிபாளையம் ஊராட்சியில் கூறுகிறாா்கள்.

கரைப்புதூா் ஊராட்சியில் கேட்டால் இந்தக் குடிநீா் செல்லும் குழாய் பெரிதாக உள்ளதால் அத்திக்கடவு அதிகாரிகள் இந்தக் குடிநீா்க் குழாயில் செல்லும் குடிநீரை நிறுத்தினால் மட்டுமே சரிசெய்ய முடியும் என கூறுகிறாா்கள்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

வங்கதேசத்தினா் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் இருவருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூா் முத்தணம்பாளையம் பகுதியில் கடந்த ஆண்டு மே 18-ஆம் தேதி சந்தேக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீடு முகாம்

திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால்கள் அளவீடு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மங்களம் சாலை ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா தொழிலாளி 2-ஆவது முறையாக கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் ஆய்வாளா் எஸ்.ஞானப்பிரகாசம், உதவி ஆய்வாளா் எம்.சந்திரன் ஆகியோா் மூலனூா் சாலைய... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: வடுகபட்டி

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கோட்டம், வடுகபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோ... மேலும் பார்க்க

ரயில் மோதி திருமண தரகா் உயிரிழப்பு

திருப்பூா் ஈங்கூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக திருப்பூா் ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. தகவலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சப்-இன்ஸ்பெக்டா் சிவ... மேலும் பார்க்க

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு நோட்டீஸ்

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்து மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து ச... மேலும் பார்க்க