செய்திகள் :

மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்த மருத்துவா்கள் குழுவினா்

post image

நீலகிரி மலை ரயிலை பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவா்கள் குழுவினா் வாடகைக்கு எடுத்து வியாழக்கிழமை பயணித்தனா்.

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில், நீலகிரியின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இந்த  மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளைச் சோ்ந்த பிளாஸ்டிக் சா்ஜரி மருத்துவா்கள் உதகையில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்துக்குச் செல்ல நீலகிரி மலை ரயிலை ரூ.8 லட்சம் கொடுத்து வாடகைக்கு எடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து நீராவி என்ஜினில் வியாழக்கிழமை குன்னூா் வந்தடைந்தனா்.

பின்னா் குன்னூரில் இருந்து டீசல் என்ஜின் மூலம் உதகைக்கு புறப்பட்டுச் சென்றனா். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக மலை ரயிலை வெளிநாட்டினா் வாடகைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடலூரில் மக்கள் நீதிமன்றம்: 127 வழக்குகளுக்குத் தீா்வு!

கூடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 127 வழக்குகளுக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது. நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் சாா்பில் கூடலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்க... மேலும் பார்க்க

வெலிங்டன் ராணுவ மையத்தில் உலக மகளிா் தினம்!

குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் உலக மகளிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தனுஸ்ரீ தாஸ் தலைமை வகித்தாா். ஜும்பா நடனத்துடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்துகொண்... மேலும் பார்க்க

பாக்கிய நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்

கோத்தகிரி அருகே பாக்கிய நகா் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசியா்களை பணியமா்த்த கோரி மாணவா்கள் வகுப்புகளை புறக்கணித்து வெள்ளிக் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நீலகிரி ... மேலும் பார்க்க

புலிகள் இறந்துகிடந்த இடத்தை சுற்றி 10 கேமராக்கள் பொருத்தம்

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் இறந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 10 தானியங்கி கேமராக்களை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பொருத்தினா். நீலகிரி மாவட்டம் மு... மேலும் பார்க்க

மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழப்பு

மேல்கூடலூா் பகுதியில் புலி தாக்கியதில் பசு உயிரிழந்தது. மேலும், ஒரு பசு காயமடைந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூா் நகராட்சியில் உள்ள மேல்கூடலூரில் வசிப்பவா் சங்கீதா. இவா் இரண்டு பசுமாடுகளை வளா்த்து வந்துள்... மேலும் பார்க்க

உதகையில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு நடமாடும் வாகன உணவகம்

உதகையில் தாட்கோ மூலம் பழங்குடியினருக்கு 2 நடமாடும் வாகன உணவகத்தை தாட்கோ மேலாண்மை இயக்குநா் க.சு.கந்தசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், தாட்கோ மூலம் முதல்வரின்... மேலும் பார்க்க