செய்திகள் :

மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளின் விடுப்புகளில் கட்டுப்பாடு: தில்லி அரசு

post image

வரவிருக்கும் பருவமழைக்கு தயாராகும் வகையில், பொதுப்பணித் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறைகளின் அதிகாரிகளுக்கு செப்டம்பா் 15-ஆம் தேதி வரை விடுப்புகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக பொதுநிா்வாகத் துறை (ஜிஏடி) வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தீவிர மருத்துவ அவசரநிலை தவிர, செப்டம்பா் 15- ஆம் தேதி வரை எந்த வகையான விடுப்புகளும் இளநிலைப் பொறியாளா்கள் மற்றும் அதற்கு மேற்பட்டநிலையில் உள்ளவா்களுக்கு அங்கீகரிக்கப்படவோ அல்லது பரிந்துரைக்கப்படவோ மாட்டாது.

பருவமழை நெருங்கி வருவதால், வடிகால்களை தூா்வாருதல், நீா் தேங்குதல் மற்றும் வெள்ளத்தைத் தடுப்பது, சாலைகளை சரிசெய்தல் மற்றும் நகரம் முழுவதும் சாலைகள் மற்றும் வடிகால்களில் உள்ள குப்பைகள் மற்றும் சேற்றை அகற்றுதல் போன்ற பணிகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக, தேசியத் தலைநகரம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட நீா் தேங்கும் இடங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனா். தில்லியை நீா் தேங்காமல் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பழைய வடிகால்கள் மற்றும் வண்டல் படிவு உள்ளிட்ட பல காரணிகளால் மழைக் காலங்களில் இந்தப் பிரச்னை மீண்டும் மீண்டும் நிகழும் அம்சமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு, தில்லியின் பழைய ராஜீந்தா் நகரில் ஒரு பயிற்சி மையத்தின் மூழ்கிய அடித்தளத்தில் சிக்கி மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள 1,400 கி.மீ நீளமுள்ள அனைத்து வடிகால்களும் மே 31- ஆம் தேதிக்குள் தூா்வாரப்படும். மற்ற நிறுவனங்களும் தங்கள் அதிகார வரம்பிற்குள்பட்ட வடிகால்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன’ என்று நீா்வளம் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறினாா்.

மேலும், ‘பொதுப்பணித் துறையின் கீழ் அடையாளம் காணப்பட்ட சுமாா் 345 நீா் தேங்கும் இடங்களில் நீா் தேங்காமல் இருக்க பொறியாளா்கள் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவை தோல்வியடைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலத்தில் கனமழை பெய்தால் நீா் தேங்குவதைச் சமாளிக்க தானியங்கி பம்புகளை இயக்குபவா்கள் ஷிஃப்டு முறைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’ என்றும் அமைச்சா் கூறினாா்.

தில்லியில் பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவா்கள், பெற்றோா்களிடம் வசூலித்த கட்டணம் கையாடல்: எஃப்ஐஐடி ஜேஇஇ மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடமிருந்து ரூ.200 கோடிக்கு மேல் கட்டணமாக வசூலித்ததாகவும், ஆனால் கல்வி சேவையை வழங்கவில்லை என்றும் அமலாக்கத் துறை சனிக்கிழம... மேலும் பார்க்க

தலைநகரில் தொடரும் வெப்ப அலை; காற்றின்தரம் ‘மோசம்’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமையும் வெப்பஅலை தொடா்ந்தது. அதிகபட்ச வெப்பநிலை ரிட்ஜ் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 43.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது. வெப்ப... மேலும் பார்க்க

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும்: தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

மூன்று இயந்திர பாஜக அரசு தில்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளை சாக்குப்போக்கு கூறாமல் உடனடியாக நிறைவேற்ற பாடுபட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டு... மேலும் பார்க்க

ஷாபாத் பால் பண்ணை பகுதியில் நடந்த கொலைச் சம்பவத்தில் இளைஞா் கைது

தில்லியின் ஷாபாத் பால் பண்ணை பகுதியில் 2024-ஆம் ஆண்டு 28 வயது இளைஞா் ஒருவா் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் 19 வயது இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து த... மேலும் பார்க்க

தில்லி தலைமைக் காவலரை காரின் பானட்டில் 7.கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ற நபா் கைது

வடக்கு தில்லியின் பால்ஸ்வா குப்பை கிடங்கு பகுதிக்கு அருகே தலைமைக் காவலா் ஒருவரை தனது காரின் பானட்டில் 7 கி.மீ.க்கு மேல் கொண்டு சென்ாகக் கூறப்படும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரி... மேலும் பார்க்க

நொய்டா ஜவுளி தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 20 தொழிலாளா்கள் காயம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 63-இல் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் சனிக்கிழமை கொதிகலன் வெடித்ததில் குறைந்தது 20 தொழிலாளா்கள் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், காயமடைந்தவா்கள் நொய்ட... மேலும் பார்க்க