செய்திகள் :

புதுச்சேரி: `கொலை வழக்கு முதல் நில அபகரிப்பு வரை' - கொலையான பாஜக பிரமுகர் ரௌடி உமாசங்கர் பின்னணி

post image

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். காங்கிரஸ், ம.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்த இவர், தற்போது பா.ஜ.கவில் தேசிய OBC பிரிவின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவரின் மகன் உமாசங்கர். சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன. அதேபோல தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் விபசார வழக்குகளும் இருக்கின்றன. புதுச்சேரி பா.ஜ.க-வின் முன்னாள் மாநில இளைஞரணித் தலைவராக இருந்த இவர், அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

சார்லஸ் மார்ட்டின், எம்.எல்.ஏ ஜான்குமாருடன் கொலை செய்யப்பட்ட உமாசங்கர்

அப்போது உமாசங்கரின் பிறந்தநாளுக்கு அவர் வீட்டுக்கே சென்று அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்தும் அளவுக்கு, அவருடன் நெருக்கமாக இருந்தார். அதன் பிறகு தன்னுடைய வீடு இருந்தது காமராஜர் தொகுதி என்பதால், பா.ஜ.க எம்.எல்.ஏ-வான ஜான்குமாரின் ஆதரவாளராக மாறினார். அப்போது ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் முன்னணி தலைவர்களையே கடுமையாகப் பேசியதால், அவரின் இளைஞரணி துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு எம்.எல்.ஏ ஜான்குமாருக்காகத் தொகுதி வேலைகளைப் பார்த்துக்கொண்டு, அவருடனேயே வலம் வந்தார்.

இந்த நிலையில்தான் தமிழக லாட்டரி வியாபாரியின் மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டினை, புதுச்சேரி அரசியலில் புகுத்துவதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார் எம்.எல்.ஏ ஜான்குமார். அதற்கான அனைத்துப் பணிகளுக்கும் எம்.எல்.ஏ ஜான்குமாருக்குப் பக்கபலமாக இருந்தார். தொகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான பணிகள், முதலியார்பேட்டையில் சார்லஸ் மார்ட்டினின் அலுவலகம் திறந்தது என அனைத்துப் பணிகளிலும் ஜான்குமாரின் நிழலாக மாறினார் உமாசங்கர். 2026 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, புதுச்சேரியில் தன்னுடைய பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட முடிவெடுத்தார் சார்லஸ் மார்ட்டின்.

சடலமாக ரௌடி உமாசங்கர்

அதன்படி இன்று (27.04.2025) கருவடிக்குப்பம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க இருந்தார் சார்லஸ் மார்ட்டின். அதற்காக புதுச்சேரி முழுவதும் எம்.எல்.ஏ ஜான்குமாரின் குடும்பம் சார்பில் ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரௌடி உமாசங்கர் செய்து வந்தார். நேற்று இரவு அந்த தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முன்னேற்பாடு பணிகளைப் பார்த்துவிட்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் உமாசங்கர் கொல்லப்பட்டார்.

கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர் கைது!

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ள 21 வயது இஞ்சினியரிங் மாணவ... மேலும் பார்க்க

Canada: திருவிழா கூட்டத்திற்குள் பாய்ந்த SUV கார்; பலர் பலி, ஏராளமானோர் படுகாயம் - நடந்தது என்ன?

கனடாவின் வான்கூவரில் லாபு லாபு விழா (Lapu Lapu Day street festival) நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அப்போது இரவு 8 மணிக்கு மேல், திடீரென கூட்டத்துக்குள் SUV கார் ஒன்று நுழை... மேலும் பார்க்க

திமுக கவுன்சிலரின் கைத்துப்பாக்கியை திருடிய 2 பேர் கைது.. திருச்சி ஹோட்டலில் நடந்தது என்ன?

நகராட்சி கவுன்சிலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நகராட்சி கவுன்சில... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாஜக பிரமுகரின் பெயர், படத்தை இன்ஸ்டாகிராமில் சர்ச்சையாக பதிவிட்ட நபர் கைது

திருச்சி, மாநகர சைபர் கிரைம் தலைமை காவலராக இருப்பவர் ராஜசேகர். இவர், அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல், வள்ளுவர் நகர், ஜின்னா தெருவைச... மேலும் பார்க்க

விமானம் மூலம் ரூ.10 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா கடத்தல் - திருச்சியில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்

இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த விமான... மேலும் பார்க்க

புதுச்சேரி: சரித்திரப் பதிவேடு குற்றவாளி, பாஜக முன்னாள் இளைஞரணி தலைவர் வெட்டிப் படுகொலை

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த காசிலிங்கத்தின் மகன் உமாசங்கர், பிரபல ரௌடியான இவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர் மீது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்... மேலும் பார்க்க