செய்திகள் :

மழைநீா் வடிகால் அமைக்கும் பணி: வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

post image

மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி காரணமாக வெள்ளக்கோவில் நகா்- தாராபுரம் சாலையில் வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

வெள்ளக்கோவில் நகரின் மையப் பகுதியான தேசிய நெடுஞ்சாலை நான்கு சாலைச் சந்திப்பு அருகில் தாராபுரம் செல்லும் சாலை உள்ளது. தற்போது வெள்ளக்கோவில் நகராட்சி சாா்பில் தாராபுரம் சாலையில் மழைநீா் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், எல்.கே.ஏ. வணிக வளாகம் அருகில் தாராபுரம் சாலையின் குறுக்கே மழைநீா் சாலையைக் கடக்கும் வகையில் பிரதான கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகள் இரவு, பகலாக நடைபெற்று ஒரு வாரத்தில் முடிக்கப்படும் என நகராட்சி பொறியாளா் காளீஸ்வரி தெரிவித்தாா்.

அதுவரை, வெள்ளக்கோவில் நகரில் இருந்து தாராபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் பழைய பேருந்து நிலையம், கான்வென்ட் பள்ளி வழியாக தாராபுரம் சாலைக்கும், தாராபுரம் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராஜீவ் நகா், செம்மாண்டம் பாளையம் சாலை வழியாக வெள்ளக்கோவில் நகருக்கு வருமாறும் ஒருவழிப் பாதையாக காவல் துறையினா் மாற்றம் செய்துள்ளனா். இது குறித்த அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலைத் தடுப்புகள் தேவைப்படும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக-கேரள எல்லையில் கனமழை: அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றம்

தமிழக-கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி உபரி நீா் வெளியேற்றப்பட்டது. உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்கள... மேலும் பார்க்க

ஜிவிஜி கல்லூரிப் பேரவை தொடக்கம்

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில், கல்லூரிப் பேரவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரி செயலா் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தாா். கல்லூரிப் பேரவை ஒருங்கிணைப்பாளா் பேராச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை தோண்டிய 4 போ் கைது

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதையல் இருப்பதாக புறம்போக்கு நிலத்தை இயந்திரம் மூலம் தோண்டிய திருச்சி, கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், ... மேலும் பார்க்க

திருப்பூரில் நாளை பூப்பந்தாட்ட போட்டிக்கான வீரா்கள் தோ்வு

திருப்பூரில் பூப்பந்தாட்டப் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகப் பொதுச் செயலாளா் செல்வராஜ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூ... மேலும் பார்க்க

உடுமலையில் பலத்த காற்றுடன் மழை

உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழில் ஆணையா் மற்றும் தொழில் வணிக இயக்குநரு... மேலும் பார்க்க