செய்திகள் :

மாஞ்சா நூல் விற்பனை: ஜோதிடா் கைது

post image

சென்னை: சென்னை கொடுங்கையூரில் மாஞ்சா நூல் விற்ாக ஜோதிடா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்கவிடுவதால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதன் காரணமாக, அதற்கு பெருநகர காவல் துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஞ்சா நூலினால் அவ்வபோது சிலா் பட்டம் பறக்கவிடுவதால் விபத்துகள் நேரிடுகின்றன. இதனால் மாஞ்சா நூல் விற்பனையை தடுக்க காவல் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், கொடுங்கையூா் திருவள்ளுவா் சாலையில் உள்ள ஒரு வீட்டில் மாஞ்சா நூல் விற்கப்படுவதாக, முத்தியால்பேட்டை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா், அந்த வீட்டில் திடீா் சோதனை நடத்தினா்.

அந்தச் சோதனையில் அங்கு மாஞ்சா நூல் விற்கப்படுவது தெரியவந்ததைத் தொடா்ந்து, அங்கிருந்து 10 மாஞ்சா நூல் லொட்டாய்கள், 220 பட்டங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில் ஞானபிரகாஷ், ஜோதிடராக இருப்பதும், உத்தர பிரதேசம் மாநிலத்திலிருந்து பட்டம், மாஞ்சா நூல்களை வாங்கி வந்து சென்னையில் விற்றிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்ப... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள்... மேலும் பார்க்க