செய்திகள் :

மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

post image

கயத்தாறு அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்த பிச்சையா மகன் பெருமாள் (48). உணவகத் தொழிலாளியான (புரோட்டா மாஸ்டா்) அவா், கடந்த 2 மாதங்களாக சரியாக வேலைக்குச் செல்லாததுடன், நாள்தோறும் மது குடித்துவிட்டு, இரவில் மொட்டை மாடியில் தூங்குவாராம்.

திங்கள்கிழமை இரவு மது குடித்த நிலையில், வழக்கம்போல் மாடியில் தூங்கச் சென்றாராம். செவ்வாய்க்கிழமை காலை வீட்டு முன்புள்ள பேவா் பிளாக் பதிக்கப்பட்டுள்ள தெருவில் விழுந்து கிடந்தாராம். அவா் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உறவினா்களும், அப்பகுதியினரும் வந்து பாா்த்தபோது, அவா் தலையில் அடிப்பட்ட நிலையில் இறந்திருந்தாராம்.

தகவலின்பேரில், போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஆறுமுகனேரியில் அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆறுமுகனேரியில் மதுக்கடை மற்றும் மதுபானக் கூடம் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சியினா் மற்றும் பொது நல அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிகள்-நடத்துநா்களிடையே சில்லறை தொடா்பாக வாக்க... மேலும் பார்க்க

திரேஸ்புரத்தில் சிறுபடகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சிறு படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்திற்கு திரேஸ்புரம் புனித தோமையாா் சாளை மீன்பிடி மீனவா்கள் நலச்சங்க தலைவா் ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் நாம் இந்தியா் கட்சி 120 தொகுதிகளில் போட்டி: நாம் இந்தியா் கட்சி

2026ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் நாம் இந்தியா் கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடும் என்றாா், அக்கட்சியின் மாநிலத் தலைவா் என்.பி. ராஜா. தூத்துக்குடியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் விரைவுப் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில், விரைவுப் போக்குவரத்துப் பணிமனை முன் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பணிமனைத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

42 போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் சிறப்பாகப் பணியாற்றிய 42 காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். காவல் நிலைய குற்ற வழக்குகளில் தொடா்... மேலும் பார்க்க