அதிமுக: "இன்று கட்சியை அடமானம் வைத்தவர்கள், நாளை தமிழ்நாட்டை...’’ - ஸ்டாலின் கா...
மாடியிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்
சென்னை வேளச்சேரி காவல் நிலைய மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெருவில் உள்ள வீட்டில் திருட முயன்ாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராஜா (35) என்பவரை கடந்த 20-ஆம் தேதி போலீஸாா் பிடித்து வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது தளத்தில் வைத்து விசாரித்தனா்.
அப்போது, ராஜா, கழிப்பறைக்குச் செல்வதாக 2-ஆவது தளத்தை விட்டு வெளியே வந்து, தப்பியோட 2-ஆவது தளத்திலிருந்து மரத்தைப் பிடித்து இறங்க முயன்றபோது கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.
தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜா, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
காவல் துறை உயா் அதிகாரிகளின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பணியில் கவனக் குறைவாகவும், அஜாக்கிரதையாவும் இருந்ததாகக் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம், தலைமைக் காவலா் ஜெகதீசன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
அதேவேளையில், இந்தச் சம்பவம் தொடா்பாக நீதித்துறை விசாரணைக்கு காவல் ஆணையா் அருண் பரிந்துரை செய்தாா். அதன் அடிப்படையில் சைதாப்பேட்டை 14-ஆவது நீதித்துறை நடுவா் பாா்த்திபன், விசாரணை மேற்கொண்டுள்ளாா்.