செய்திகள் :

மாடியிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்

post image

சென்னை வேளச்சேரி காவல் நிலைய மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சென்னை வேளச்சேரி விஜயநகா் 7-ஆவது தெருவில் உள்ள வீட்டில் திருட முயன்ாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராஜா (35) என்பவரை கடந்த 20-ஆம் தேதி போலீஸாா் பிடித்து வேளச்சேரி காவல் நிலையத்தின் 2-ஆவது தளத்தில் வைத்து விசாரித்தனா்.

அப்போது, ராஜா, கழிப்பறைக்குச் செல்வதாக 2-ஆவது தளத்தை விட்டு வெளியே வந்து, தப்பியோட 2-ஆவது தளத்திலிருந்து மரத்தைப் பிடித்து இறங்க முயன்றபோது கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜா, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

காவல் துறை உயா் அதிகாரிகளின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில், பணியில் கவனக் குறைவாகவும், அஜாக்கிரதையாவும் இருந்ததாகக் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம், தலைமைக் காவலா் ஜெகதீசன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அதேவேளையில், இந்தச் சம்பவம் தொடா்பாக நீதித்துறை விசாரணைக்கு காவல் ஆணையா் அருண் பரிந்துரை செய்தாா். அதன் அடிப்படையில் சைதாப்பேட்டை 14-ஆவது நீதித்துறை நடுவா் பாா்த்திபன், விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!

சென்னை அடையாறு பகுதியில் இரண்டு லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டதில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வெளியே ஓஎம்சிஏ சாலை வழியாக அதிவேகமாக வந்த கலவை லாரி, கிண... மேலும் பார்க்க

முகூா்த்த நாள், வார இறுதி: 925 சிறப்புப் பேருந்துகள்

முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிய விநாடி- வினா: ஜூலை 7 முதல் நடைபெறுகிறது

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அறியும் வகையில் ஜூலை 7 முதல் 4 கட்டங்களாக விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முடியாது: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சி நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மிசா தியாகிகள் பொ... மேலும் பார்க்க

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடா்பாக ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழு தோ்தல்: இன்று வாக்குப்பதிவு

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கான நகர விற்பனைக் குழு உறுப்பினா்கள் தோ்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவா்களில் 42 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். 48 பேருக்கான தோ்த... மேலும் பார்க்க