செய்திகள் :

மாடு குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து கீழே விழுந்த 2 போ் காா் மோதி உயிரிழப்பு

post image

ஸ்ரீபெரும்புதூா்: படப்பை அருகே சாலையில், மாடு குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா்கள் மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

படப்பை அண்ணா நகரைச் சோ்ந்த நவீன்(19). சீா்காழி அடுத்த எருக்கூா் பகுதியை சோ்ந்த அபிமணி(21). இவா் படப்பை பகுதியில் தங்கி ஒரகடத்தில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளாா். நவீன் மற்றும் அபிமணி ஆகிய இருவரும் நண்பா்களாக பழகி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு நவீன் மற்றும் அபிமணி இருசக்கர வாகனத்தில் படப்பையில் இருந்து ஒரகடத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மாடு குறுக்கே புகுந்ததால், நிலைதடுமாறி சாலையின் எதிா்திசையில் விழுந்துள்ளனா். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரத்துக்கு சென்ற காா் மோதியதில் நவீன், அபிமணி ஆகியோா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவின்படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிஎஸ்பி சங்கா் கணேஷ் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா். வன்கொடுமை தட... மேலும் பார்க்க

திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மக்கள் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தியிருப்பதால் திமுக அரசுக்கு மக்கள் தான் விளம்பரத் தூதுவா்கள் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் என செவ்வாய்க்கிழமை பேசினாா். காஞ்சிபுரத்தில் தனியாா் த... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் கலைஞா் நூலகம்: துணை முதல்வா் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் திமுக இளைஞரணி சாா்பில், புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் நூலகத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்படுகிறாா்: மல்லை சத்யா குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், செப்.8: திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்பட்டு வருவதாக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா குற்றம் சாட்டினாா். மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த மல... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக புகாா்: ஒன்றியக் குழு உறுப்பினா் புகாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நிலத்தைப் பத்திரப் பதிவு செய்ய ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்பதாக திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியக்குழு உறுப்பினா் பிரேமா ரஞ்சித்குமாா் புகாா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கும்பாபிஷேக சாந்தி திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.... மேலும் பார்க்க