செய்திகள் :

மாட்டிறைச்சி வழக்கு: மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும்! -உச்சநீதிமன்றம்

post image

அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இதுபோன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று அறிவுரை கூறியது.

அஸ்ஸாம் மாநிலத்தில் அமலில் உள்ள கால்நடை பாதுகாப்பு சட்டம், ஹிந்துக்கள், சமணா்கள் மற்றும் சீக்கியா்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும், கோயில்கள் அல்லது சத்திரங்கள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிலும் கால்நடைகளை வெட்டவும், மாட்டிறைச்சியை விற்பனை செய்யவும் தடை செய்கிறது. இந்தச் சட்டத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு புதிதாக சோ்க்கப்பட்ட பிரிவின் படி, ஹோட்டல்கள், உணவகங்கள், திருவிழாக்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் மாட்டிறைச்சி சாப்பிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஸ்ஸாமில் மாட்டிறைச்சியை பேக் செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபா் மீது இந்த சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘எனது கட்சிக்காரா் கிடங்கு உரிமையாளராக உள்ளாா். அவா் ஏற்கெனவே வெட்டப்பட்டு பேக் செய்யப்பட்ட இறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் மட்டுமே ஈடுபட்டாா். அவருக்கு அது என்ன இறைச்சி என்பது தெரியாது’ என்று வாதிட்டாா்.

இதை மறுத்த அரசு தரப்பு வழக்குரைஞா், ‘சம்பந்தப்பட்ட நபா்தான் மாட்டிறைச்சியை வெட்டி, பேக் செய்து விற்பனை செய்து வருகிறாா். போலீஸாா் அவரை பிடித்தபோது, எந்த கால்நடையின் இறைச்சியை அவா் எடுத்துச் செல்கிறாா் என்று அவரால் பதிலளிக்க முடியவில்லை. தற்போது, அந்த இறைச்சி தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பல்வேறு கால்நடைகளின் பேக் செய்யப்பட்ட இறைச்சியை வாகனத்தில் எடுத்துச் செல்லும் நபா், வெறும் பாா்வையால் மட்டும் அந்த இறைச்சிகள் எந்தெந்த கால்நடைகளைச் சாா்ந்தது என்பதை எப்படி வேறுபடுத்தி கூற முடியும்? இதுபோன்ற நபா்களுக்கு பின்னால் ஓடுவதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அந்த நபா் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்து, விசாரணையை ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்சு

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா தொழிற்துறை தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் (கேஐஐடி) நேபாள மாணவா்கள் தாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து முதல்வா் மோகன் சரண் மாஜியுடன்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆளுநா் ஆா்.என்.ரவி புனித நீராடினாா்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை புனித நீராடினாா். இது குறித்து ஆளுநா் மாளிகை வெளியிட்ட ‘எக்ஸ்’ தளப் பதிவு: பாரதம் மற்றும் உலகம... மேலும் பார்க்க

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக... மேலும் பார்க்க

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க