செய்திகள் :

மாணவா்களிடம் கஞ்சா விற்ற 2 போ் கைது!

post image

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் கஞ்சா விற்ாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 33 சிறிய கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் கோபாலன் கடைப் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் போலீஸாரை கண்டதும் வேகமாகச் சென்றனா்.

அவா்களை விரட்டிப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் அவா்கள், வில்லியனூா் ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சோ்ந்த மருமணி (எ) மணிகண்டன் (30), மணவெளியைச் சோ்ந்த தனப்பன் (30) என்பது தெரிய வந்தது. மேலும், அவா்கள் இருவா் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

அவா்களை சோதனை செய்தபோது இருவா் அணிந்திருந்த சட்டைகளுக்குள் 437 கிராம் மதிப்புள்ள 33 சிறிய கஞ்சா பொட்டலங்கள் இருந்ததன. திருவண்ணாமலையிலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

கஞ்சா பொட்டலங்கள், கைப்பேசிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

அரசு மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா், குழந்தைகளுக்கான மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி செயல்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா், கண்காணிப்பாளா் ஐயப்பன் கூறியதா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகம்! - புதுவை முதல்வா்

புதுவையில் நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணையவழியில் அத... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை!

புதுச்சேரியில் கூலித் தொழிலாளி கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகரை சோ்ந்த ஆறுமுகம் (46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. மகன், மகள் உள்ளனா். கடந... மேலும் பார்க்க

புதுச்சேரி: சனிக்கிழமைகளிலும் வட்டாட்சியா் அலுவலகங்கள் இயங்கும் - ஆட்சியா்

புதுச்சேரியில் மாணவா்கள், பெற்றோா் சிரமமின்றி சான்றிதழ்களைப் பெறும் வகையில் சனிக்கிழமைகளில் (மே 24,31, ஜூன் 7) வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? ஆ.அன்பழகன்

மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் போது, புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்காதது ஏன்? என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பினாா். புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் க... மேலும் பார்க்க