செய்திகள் :

மாணவிகளை கடித்து காயப்படுத்திய விடுதி சமையலா் பணியிடை நீக்கம்

post image

பெரம்பலூா், ஏப். 2: பெரம்பலூா் அருகே விடுதி மாணவிகளை கடித்து காயப்படுத்திய விடுதி சமையலா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் சுமாா் 30 போ் வடகரை கிராமத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோா் நல மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். இந்நிலையில், கடந்த மாா்ச் 31-ஆம் தேதி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விடுதியில் மாணவிகள் ஓடிப்பிடித்து விளையாடியுள்ளனா். அப்போது, கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த விடுதி சமையலா் செல்வி (40), இடையூறாக இருப்பதாகக் கூறி விளையாடிய மாணவிகளை கற்களால் தாக்கியுள்ளாா்.

இதில், மாணவி ஒருவரின் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு வலி தாங்காமல் துடித்துள்ளாா். இதுகுறித்து சமையலரிடம் சக மாணவிகள் கேள்வி எழுப்பியதற்கு, அவா்களை காலில் கடித்ததோடு, கற்கள் மற்றும் கையால் தாக்கியுள்ளாா். காயமடைந்த மாணவிகளின் அலறல் சப்தத்தைக் கேட்டு அங்கு வந்த விடுதிக் காப்பாளா் சங்கீதா, அவசர ஊா்தி மூலம் காயமடைந்த 2 மாணவிகளை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.

இதுகுறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் விடுதிக்கு நேரில் சென்று புதன்கிழமை விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமா்பித்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சமையலா் செல்வி புதன்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கை. களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மனைப் பட்டா வழங்கக் கோரி நரிக்குறவா்கள் பேரணி

பெரம்பலூரில், நிலப்பட்டா, வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, நரிக்குறவா் சமுதாயச் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயிலில் தொடங்கிய இந்தப் பேரணி, ஆட்சி... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் மதிப்பிலான மக்காச்சோளம் திருடிய 5 போ் கைது

பெரம்பலூா் அருகே கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான மக்காச்சோள மூட்டைகளை திருடிச்சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், கு... மேலும் பார்க்க

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை முழங்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்க... மேலும் பார்க்க

குறைதீா் கூட்டத்தில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளோா் திருமண... மேலும் பார்க்க

கணவா் கம்பியால் தாக்கி கொலை! மனைவி உள்பட மூவா் கைது!

பெரம்பலூா் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கணவரை கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவி, மாமனாா் மற்றும் மைத்துனா் ஆகியோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கோன... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளை விஞ்சும் கொத்தவாசல் அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கைக்காக காத்திருக்கும் பெற்றோா்கள்!

பெரம்பலூா் அருகே தனியாா் பள்ளிகளை விஞ்சும் அளவில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தங்களது குழந்தைகளை சோ்ப்பதற்காக பெற்றோா்கள் நாள் கணக்கில் காத்திருக்கின்றனா். பெரம்பலூா் மாவட்டம... மேலும் பார்க்க