செய்திகள் :

மாணவி வழக்கில் பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில், பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது என சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது என சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளா்கள், பத்திரிகையாளா் மன்றம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன.

காவல் துறையினா் மீது நடவடிக்கை இல்லை: அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், முதல் தகவல் அறிக்கை காவல் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வுக் குழு மூன்று முறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதன்படி விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அப்போது கைப்பேசிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். அவற்றைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

செய்தியில் எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த வழக்கில் பத்திரிகையாளா்கள் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அல்லா். முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த காவல் துறையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பத்திரிகையாளா்கள் அச்சுறுத்தப்படுகின்றனா். சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்படுகின்றன. பத்திரிகையாளா்கள் என்ற முறையில் அவா்கள் தங்கள் கடமையைச் செய்தனா்.

முதல் தகவல் அறிக்கையைப் பதிவேற்றம் செய்யும் சிசிடிஎன்எஸ் இணையதளத்தை மத்திய அரசின் தேசிய தகவலியல் மையம் (என்ஐசி) பராமரிக்கிறது. பிரச்னைக்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என என்ஐசி இயக்குநா் கூறியிருக்கிறாா். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவா்கள்தான். சட்டத்தைவிடவும், நீதிமன்றத்தைவிடவும் அதிக அதிகாரம் உள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு கருதக் கூடாது என வாதிட்டனா்.

நீதிபதி சரமாரி கேள்வி: காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முகிலன், முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரம் தொடா்பான வழக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தடை செய்யவில்லை. அழைப்பாணை மட்டுமே அனுப்பப்பட்டு, விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தும் எண்ணம் இல்லை. அனைத்து நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என வாதிடப்பட்டது.

விசாரணையின்போது, முதல் தகவல் அறிக்கை பொது ஆவணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, பத்திரிகையாளா்களிடம் தனிப்பட்ட விவரங்களை ஏன் கேட்கிறீா்கள்?, பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தினாா்களா?, முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது யாா்?, ஆவணத்தின் உரிமையாளா் என்ற அடிப்படையில் காவல் துைான் பதிவேற்றம் செய்துள்ளது. இது யாா் தவறு? பத்திரிகையாளா்களைத் தவிர எத்தனை பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது?, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை விசாரித்தீா்களா?, முதல் தகவல் அறிக்கை எழுதியவரை விசாரணை செய்தீா்களா?, பத்திரிகையாளா்களை ஏன் துன்புறுத்துகிறீா்கள்?, குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும்?, கைப்பேசியை ஏன் பறிமுதல் செய்ய வேண்டும்?, சரியான நபா்களை விசாரிக்காமல் தேவையில்லாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீா்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாா்.

பின்னா், பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது எனவும், அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளை விசாரணைக்குப் பின் திரும்ப ஒப்படைக்கவும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பத்திரிகையாளா்களுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தாா்.

சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் சரிவு: அண்ணாமலை

திமுகவின் வாக்கு வங்கி குறைந்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் தபால் ந... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசுப் பள்ளிகளை மூடும் திமுக அரசு: எல்.முருகன் கண்டனம்

நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை இழுத்து மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நீலகிர... மேலும் பார்க்க

திமுக முழுவதும் ஜாமீன் வாங்கிய அமைச்சர்கள்தான் இருக்கிறார்கள்: செல்லூர் ராஜு

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என்று செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.மதுரை மாவட்டம் பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத் திறப்பு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பவன் கல்யாண் தரிசனம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன்கல்யாண் அவரது மகன் அகிராநந்தன் உள்ளிட்டோருடன் ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பெயரில் போலி இணையதளம்! கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

காரைக்கால் திருநள்ளாறில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பெயரில் போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் மற்றும் பெங்களூருவைச் சேர... மேலும் பார்க்க

ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று(வெள்ளிக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ஏவிஎ... மேலும் பார்க்க