செய்திகள் :

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

post image

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா்.

ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சான்றோா்குப்பம் மந்தகரை பகுதியில் இந்து மக்கள் கட்சி சாா்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் அா்ஜூன் சம்பத் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்துக்கு நகர பொதுச் செயலா் வி.காா்த்திக் பாபு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எல்.ர மேஷ், ஆா்.எஸ்.இன்பவேல், ஏ.சீனிவாசன், எஸ்.செந்தில், எல்.நவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், அவா் கூறுகையில், திமுக அளித்த வாக்குறுதிப்படி, மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிா்வாகச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளா்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. அவா்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய சம்பளம் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. தூய்மைப் பணி தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா், வேலூா் மாவட்டங்களில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் கனிமவளக் கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. இந்தக் கொள்ளையை வெளிக்கொணரும் சமூக ஆா்வலா்கள் மிரட்டப்பட்டுள்ளனா். கொலை செய்யப்பட்டுள்ளனா். சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்றாா்.

கடையின் பூட்டை உடைத்து ரூ 4 லட்சம் திருட்டு

வாணியம்பாடியில் கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் ரூ.4 லட்சத்தை திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில்-தெக்குப்பட்டு சாலையில் பாரத்நகா் அருகில் யுவராஜ் என்பவா் இருசக்கர வாகனங்களை வாங்க... மேலும் பார்க்க

சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க கிராம மக்கள் கோரிக்கை

நாட்டறம்பள்ளி அருகே சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் எனக் கோரி வெள்ளநாயக்கனேரி கிராம மக்கள் மனு அளித்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி சோமு... மேலும் பார்க்க

கிணற்றில் பெண் சடலம் மீட்பு

திருப்பத்தூா் அருகே கிணற்றில் பெண் சடலம் மீட்கப்பட்டது. திருப்பத்தூா் அருகே உள்ள குனிச்சி மோட்டூா் பகுதியில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப... மேலும் பார்க்க

கடும் வெயில் எதிரொலி: பக்தா்களுக்கு நீா் மோா்

வெயிலின் தாக்கத்தை குறைக்க ஆம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பாக நீா் மோா் வழங்கும் பணி தொடங்கியது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெப்பநிலை அதிக... மேலும் பார்க்க

திருப்பத்தூா் புத்தகத் திருவிழா: ரூ.22 லட்சத்துக்கு விற்பனை

திருப்பத்தூரில் கடந்த 10 நாள்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.22 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது என மாவட்ட நூலக அலுவலா் கிளமெண்ட் தெரிவித்துள்ளாா். அவா் கூறியதாவது: திருப்பத்தூா்... மேலும் பார்க்க

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பால அறிவிப்பு: பட்டாசு வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்

ஆம்பூா் ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதாக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். ஆம்பூா... மேலும் பார்க்க