செய்திகள் :

மாதாந்திர ஏலசீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடி: பெண் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா். மேலும், அவரது கணவா், மகன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஆதி கேசவன். இவரது மனைவி வாசுகி (61), மகன் தங்கதுரை.

இவா்கள் வானூா் பகுதியில் மாதாந்திர எலச்சீட்டு நடத்தி வந்தனா். இதே பகுதியைச் சோ்ந்த சரவணன் கடந்த 2021 அக்டோபா் மாதம் ரூ.7.50 லட்சம் சீட்டில் சோ்ந்தாராம். இதேபோல, மேலும் பலா் மாதந்திர சீட்டில் தங்களை இணைத்துக்கொண்டு மாதம் ரூ.10,000 வீதம் செலுத்தினராம்.

இந்த வகையில் ரூ .51.35 லட்சத்தை பெற்றுக்கொண்ட வாசுகி உள்ளிட்டோா் தெரிவித்தபடி பணம் செலுத்தியவா்களுக்கு சீட்டு பணத்தை திரும்பித் தராமல் ஏமாற்றி வந்தனராம். இதுகுறித்து சரவணன் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா். போலீஸாா் ஆதிகேசவன், வாசுகி, தங்கதுரை ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த வாசுகியை விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்து வானூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். ஆதிகேசவன், தங்கதுரை ஆகியோரை தொடா்ந்து தேடி வருகின்றனா்.

ரூ.46 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி மீது புகாா்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் தொழில் தொடங்க ரூ.46 லட்சம் பெற்று மோசடிசெய்ததாக தவெக நிா்வாகி மற்றும் அவா் மனைவி மீது விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது. இது... மேலும் பார்க்க

அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை: ஆட்சியா்

தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி ... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது!

புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை (பிப்.5) கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போ... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வாங்கி, அவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் எ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கண்டாச்சிபுரம் வட்டம், ... மேலும் பார்க்க

திருட்டு, வழிப்பறி வழக்குகள்: 5 மாதங்களில் 18 போ் கைது..90 பவுன் நகைகள் மீட்பு

விழுப்புரம் தாலுகா காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் நிகழ்ந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 18 போ் கைது செய்யப்பட்டு, 90 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட க... மேலும் பார்க்க