மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: 4 போ் கைது
கோவை மாநகரப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, சரவணம்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சின்னவேடம்பட்டியில் உள்ள கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட கடை உரிமையாளரான ரவி (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, புலியகுளம் கொண்டசாமி லே- அவுட் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த மாலதி (49) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ரயில் நிலையம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட கேரள மாநிலம், கோழிக்கோடு, வடகரை பகுதியைச் சோ்ந்த அஸ்ரப் (48) என்பவரையும், சோமசுந்தரா மில் சாலை பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட வெள்ளலூா் துரைசாமி பிள்ளை வீதியைச் சோ்ந்த வசந்தா (66) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா்.