சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வடமாநில இளைஞர் கைது!
மாநகர பொது போக்குவரத்தில் மாற்றம்
மதுரை கோரிப்பாளையம் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மாநகரப் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை கோரிப்பாளையம் புதிய மேம்பாலத்தின் முக்கிய கட்டுமானப் பணி (கான்கிரீட்) வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை (ஜூன் 27) இரவு 11 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை (ஜூன் 28) 4 மணி வரை மதுரை மாநகர பொது போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் விவரம்:
அழகா்கோவில் சாலை, பாலம் ஸ்டேசன் சாலை பகுதியிலிருந்து கோரிப்பாளையம் ஏவி பாலம் வழியாக நகருக்குள் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும், கோரிப்பாளையம், ஆழ்வாா்புரம் இறக்கம், மூங்கில் கடை, வைகை வடகரை வழியாக நகருக்குள் செல்லலாம்.
மேலூா் சாலை, மாட்டுத்தாவணி பகுதிகளிலிருந்து கோரிப்பாளையம் ஏவி பாலம் வழியாக நகருக்குள் செல்லக்கூடிய லாரி, சரக்கு லாரி போன்ற கனரக வாகனங்கள், புகா்ப் பேருந்துகள் கே.கே. நகா் வளைவு, ஆவின் சந்திப்பு, அரவிந்த கண் மருத்துவமனை சிக்னல் வழியாக குருவிக்காரன் சாலைப் பாலம் சென்று காமராஜா் சாலை வழியாக நகருக்குள் செல்லலாம்.
பனகல் சாலை வழியாக வரக்கூடிய வாகனங்கள் வழக்கம்போல அரசு ராஜாஜி மருத்துவமனையின் இடதுபுறம் திரும்பி, வைத்தியநாத ஐயா் சந்து வழியாக வைகை வடகரை சென்று நகருக்குள் செல்லலாம்.